Tag Archives: ஆசிரியர்தெரிவு

யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லையாம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதேவைளை, வேண்டுமானால் அவர்களுக்கும் எமக்கும் இடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் அந்த இணக்கப்பாட்டை நாம் மீறியிருந்தால் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பல வருடங்களாக பேசப்பட்ட போதும் அவ் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலமை தொடர்பாக சிந்தித்து வரும் நிலையில் ...

Read More »

இனிதான் இம்ரான் கானின் சுயரூபம் வெளிப்படும்! – முன்னாள் மனைவி

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அளித்த பேட்டியில், இம்ரான் கானின் சுயரூபம் இதன்பிறகே வெளிப்படும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து நீங்கள் வெளியிட்ட புத்தகம் இம்ரான் கானை தாக்கி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் கண்டுகொள்வதில்லை. அந்த சமயங்களில் நான் காது கேளாதவள் ஆகிவிடுவேன். இந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் மக்கள் ...

Read More »

புதிய தோற்றத்துடன் அவுஸ்திரேலிய நாணயங்கள்!

அவுஸ்திரேலியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய நாணயங்களில் எலிசபெத் மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்படவுள்ளது. நாணயங்களில் பொறிக்கப்படவுள்ள மகாராணியின் புதிய தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை Governor-General Peter Cosgrove  நேற்று (03) வெளியிட்டு வைத்துள்ளார். இதேவேளை பிரித்தானியாவைச் சேர்ந்த Jody Clark என்பவரினால் வடிவமைக்கப்பட்ட மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்பட்ட நாணயங்கள் அடுத்த ஆண்டு முதல் பாவனைக்கு வரும் என தெரிகிறது.

Read More »

நயன்தாராவை ஏமாற்றிய படம்!

அறம், டோரா படங்களுக்குப் பிறகு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும், தமிழ்நாட்டில் இப்படத்திற்கு ஓப்பனிங் இருந்தது. இந்நிலையில், கடந்த 31-ந்திகதி அன்று கோ கோ கோகிலா என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. ஆனால் நயன்தாராவின் நடிப்புக்கு கைதட்டல் கிடைத்தபோதும், படத்திற்கு வரவேற்பு இல்லையாம். அந்த வகையில், தெலுங்கில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நயன்தாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

Read More »

ஐநா குழுவிற்கு பதில் அளிக்காத சிறிலங்கா அரசாங்கம்!

ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய காலத்தில் பதில் அளிக்காதது குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாகவும் அந்த சித்திரவதைகளுக்கும் முன்னாள் சிஐடி தலைவரிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிப்பொறிமுறையையொன்றை உருவாக்குமாறு ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது. ஐக்கியநாடுகள் குழு இது தொடர்பாக மேலதிக விபரங்களை சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. ஐக்கியநாடுகளின் குழுவினர் கோரிய தகவல்களை வழங்குவதற்கான காலம் முடிவடைந்து ஒரு வருடகாலமாகிவிட்ட நிலையிலும் இன்னமும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டவர் சிறிலங்கா அமைச்சரின் நெருங்கிய உறவினர்!

சிறிலங்கா அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினரே அவுஸ்;திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 25 வயது முகமட் நிஜாம்டீன் சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சரின் நெருங்கிய உறவினர் என ஏபிசி.நெட் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. நிஜாம்டீன் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவரின் சகோதரரான ஒருவர், நிஜாம்டீன் குற்றமிழைத்திருக்கமாட்டார் அவர் வெளிப்படையான முஸ்லீம் என ...

Read More »

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 8 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முகமது சிராஜ்!

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக முகமது சிராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார். இந்தியா – ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கவாஜா, குர்ட்டிஸ் பேட்டர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேட்டர்சன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் வந்த ...

Read More »

பிரேசிலில் 200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து!

பிரேசில் நாட்டில் உள்ள 200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இதில் பிரேசில் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் உள்ளிட்ட பிறநாடுகளின் கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகத்தில் ஞாயிறு இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு ...

Read More »

புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்!

பல படங்களில் பிசியாக நடித்து வரும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இன்று முதல் புதிய உறுதி ஒன்றை எடுத்துள்ளார். இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது கதாநாயகனாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ஐயங்கரன், ஜெயில், வாட்ச்மேன், 4 ஜி, அடங்காதே, 100% காதல் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் ஆலை மூடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டு ...

Read More »

அவுஸ்திரேலிய காவல் துறையின் அதிர்ச்சித் தகவல்!

பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான சிறிலங்கா இளைஞன் குறித்து அவுஸ்திரேலிய காவல் துறையினர் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர். குறித்த இளைஞனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதனை உறுதி செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், சிட்னியின் முக்கிய இடங்களான ஓபரா ஹவுஸ், காவல் துறை நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கைதான இளைஞன் ...

Read More »