புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்!

பல படங்களில் பிசியாக நடித்து வரும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இன்று முதல் புதிய உறுதி ஒன்றை எடுத்துள்ளார்.

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தற்போது கதாநாயகனாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ஐயங்கரன், ஜெயில், வாட்ச்மேன், 4 ஜி, அடங்காதே, 100% காதல் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் ஆலை மூடுதல் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டு குரல் கொடுத்துள்ளார்.

தற்போது புதிய உறுதி எடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதாவது தனது கையெழுத்தை தமிழில் போட இருப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘உலகம் வென்ற தமிழ், நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ்… இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்… #தமிழ்விதியெனசெய்’ என பதிவு செய்திருக்கிறார்.