Tag Archives: ஆசிரியர்தெரிவு

விமானத்தில் நாயை அழைத்து வர பெண் செய்த காரியம்

சமீபத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வர செய்த காரியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விமானங்களில் நாய், பூனை போன்ற செல்ல வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறது. இவை 5 கிலோ எடைக்கும் கீழ் இருந்தால் அவற்றை அதற்கான விசே‌ஷ காற்றோட்ட வசதி உள்ள பையில் அடைத்துக் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் சரக்கு கேபின் மூலமாகவும் இவற்றை கொண்டு வரலாம். இதற்காக தனி டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும். சமீபத்தில் மும்பையில் ...

Read More »

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் – துஷான் குணவர்தன

இரு அமைச்சர்களின் வற்புறுத்தல் காரணமாக நான் இராஜினாமா செய்கிறேன் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டமைக்கு இரண்டு அமைச்சர்கள் பிரச்சினைக்குள்ளாகி என்னைப் பதவிலிருந்து விலக்கத் திட்டமிட்டுள்ளனர் என நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித் துள்ளார். எனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனது உயிரைக் காப்பாற்றப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைப் பூடு ...

Read More »

அரசாங்கத்துக்குள் பனிப்போர்!

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்கே அந்த 10 பங்காளிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Read More »

ஆஸி.யில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்- பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்த காவல் துறை

ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்களின்போது பொது மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அவ்வகையில், ...

Read More »

ஸ்பெயின் தீவில் எரிமலை வெடித்து சிதறியது

ஸ்பெயினுக்கு சொந்தமான தீவில் எரிமலை வெடித்து சிதறிய நிலையில் அப்பகுதி மக்கள் வெளியேறி இருந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது. இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது ஆகும். இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவில் 8 எரிமலைகள் உள்ளன. அவை தற்போதும் அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலைகளில் ஒன்று ‘கும்ப்ரே வியாஜே’ 1971-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து சிதறியது. அதன் பிறகு 50 ஆண்டு காலம் மவுனமாக ...

Read More »

அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய ஈஸ்டர் தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது!

அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பயன்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுக்கும் கத்தோலிக்க ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கத்தோலிக்க சமூகத்தினரிடையே அரசாங்கம் பொய்யான கூற்றுகளை பரப்புகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பான 22 தொகுதிகளில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த வேண்டும். தாக்குதல்களின் ஆதாரங்களைக் கொண்ட 23 ...

Read More »

அமைச்சரவையிலிருந்து Christian Porter விலகினார்

ABC ஊடகவியலாளர் Louise Milligan மற்றும் அவர் சார்ந்த ABC நிறுவனத்திற்கு எதிராக மான நட்ட வழக்கு தொடர்வதற்கு நன்கொடையாக பணம் பெற்றதை ஏற்றுக் கொண்ட Christian Porter, அமைச்சரவையிலிருந்து இன்று விலகினார். தொழிற்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராகக் கடமையாற்றிய Christian Porterருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் பிரதமர் Scott Morrison கூறவில்லை. அதே வேளை, இது குறித்து விரிவாக ஆராயும்படி பிரதமர் பணிமனை தலைவர் Phil Gaetjens அவர்களைக் கேட்டுள்ளார். நிதி வழங்கியவர் யார் என்று Christian Porter அடையாளப் படுத்த ...

Read More »

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியானது எப்படி?

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆனால், மரணம் தொடர்பில் காவல் துறை , தற்கொலை எனும் ...

Read More »

அமெரிக்க எல்லையில் தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகள்

அமெரிக்க அரசின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு அகதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துளள்து. ஹைத்தி நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மெக்சிகோவுடன் இணைக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல் ரியோ சர்வதேச பாலத்தின் அடியில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து அவர்கள் தங்கியிருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அவர்கள், அமெரிக்காவுக்குள் செல்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி உள்ளனர். 10 ஆயிரத்தற்கும் ...

Read More »

மக்கள் உண்ணக்கூட முடியாத நிலையில் மதுக்கடையைத் திறக்க யார் தீர்மானித்தது?

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்களின் வரு மானங்கள் அனைத்தும் இழந்துள்ள நேரத்தில் மதுபான விற்பனை நிலையங் களைத் திறப்பதற்கான தீர்மானத்தை யார் எடுத்தது என்று ஐக்கிய தேசிய சுய தொழில் வர்த்தக சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி கேட்டுள்ளது. அரசியல்வாதிகளின் தேவையின் பேரில் மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அதன் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் ஊடக சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

Read More »