மக்கள் உண்ணக்கூட முடியாத நிலையில் மதுக்கடையைத் திறக்க யார் தீர்மானித்தது?

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்களின் வரு மானங்கள் அனைத்தும் இழந்துள்ள நேரத்தில் மதுபான விற்பனை நிலையங் களைத் திறப்பதற்கான தீர்மானத்தை யார் எடுத்தது என்று ஐக்கிய தேசிய சுய தொழில் வர்த்தக சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி கேட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் தேவையின் பேரில் மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அதன் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் ஊடக சந்திப்பில் குற்றம் சாட்டினார்.