Tag Archives: ஆசிரியர்தெரிவு

போலிமனிதர்களை எம் தமிழ் தேசிய அரசியலில் இருந்து நீக்குங்கள்- சசிகலா ரவிராஜ்

போலி மனிதர்களை எமது தமிழ்தேசிய அரசியலில் இருந்து நீக்கி எம் இனத்தின் வீரத்தை உரிய நேரத்தில் வெளிக்காட்டுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்தேசிய தலைமையின் பிள்ளைகள் நாம் யாரை ஆதரிக்கவேண்டும்,யாரை நீக்கவேண்டும் என்ற முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எனது மனதில் இருந்தவற்றை தெளிவாக தெரிவித்துவிட்டேன்,தமிழ்தேசியம் வெல்வதற்கு நீங்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை நீக்கவேண்டும் என்பதை நீங்கள ஊகித்துவிட்டதை உளமாற உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் களப்பணியை எந்த ஒரு தயக்கமும் இன்றி போலிமனிதர்களை ...

Read More »

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனைசெய்வதற்கான யோசனை- நிராகரித்தது தமிழ்நாடு

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு நிராகரித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை எங்களிடம் முன்வைத்தது என தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் எனினும் இலட்ச்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்று தமிழர்கள் ...

Read More »

தேர்தலில் யாரை ஆதரிப்பது?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்று அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை முதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் காணப்பட்டவை எனக்கூறப்படும் சில அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில், மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எம். பாலேந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார். பொது மக்களுக்குத் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் பல்கலைக்கழக ...

Read More »

வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே….

இலங்கையில் மோதல் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆகின்ற போதிலும் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுகின்றது என ஐநாவின் அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமைக்கான சுதந்திரம் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் கிளைமென்ட் யலெட்சோசி வியுல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்பு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநாவின் விசேட அறிக்கையாளர் அரசாங்கத்தின் உத்தரவுகளிற்கு அப்பால் இது சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். 2019 உயிர்த்த ...

Read More »

உலகை அதிரவைத்திருக்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள்!

நிறவெறிக்கு எதிராக உலகெல்லாம் ஊர்வலங்கள் தற்போது நடப்பதற்கு அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இது போன்ற பல படுகொலைகள் இதுவரை பல நாடுகளில் நடந்தேறி இருக்கின்றன. கனடாவிலும் ஊர்வலங்கள் நடந்தேறின. தனிப்பட்ட சாதாரண ஒருவரின் மரணம், அதை வீடியோ படமாக்கியது, அதை ஊடகங்கள் வெளியே கொண்டுவந்த முறை, பொறுமையை இழந்த கறுப்பின மக்கள் ஒன்றுபட்டுச் செயலாற்றியது என்று எல்லாம் சேர்ந்துதான் அமெரிக்காவை இந்த மரணம் அதிரவைத்திருக்கின்றது. இது போன்ற வேறு நாடுகளில் நடந்த பல மரணங்களை மூடி மறைக்கவும் ...

Read More »

ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை என்கிறார் தேரர்!

ஒன்பது மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த ...

Read More »

சிறிலங்கா படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை?

ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுவதை கடைப்பிடிக்குமுகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக கடந்த மூன்று தாசப்தகாலமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுத குழுக்களும் பயன்படுத்தும் 219 இடங்களை அடங்கிய வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும்,ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் வெளியிட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளின் முழுமையான அளவினை இந்த வரைபடம் வெளிப்படுத்தவில்லை என இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. ஜேவிபியின் முதலாவது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அரசு , தனியார் துறையின் மீது சைபர் தாக்குதல்!

அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலானது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்  மேலும் அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களைத் திருடி இருக்கலாம் ...

Read More »

ஊடகவியலாளர் அடையாள அட்டை விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு

ஊடகவியலாளர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பில் பொது கொள்கை அவசியம். இதுவரைகாலமும் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதைப் போன்று இம்முறையும் தகவல் திணைக்களத்தின் அனுமதியுடனே அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, எந்தவொரு செயற்பாடுகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரை தலையிடச் செய்வது என்பது பெரும் அச்சுறுத்தல் மாத்திரமின்றி அடக்குமுறை முயற்சி எனவும் எச்சரித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ...

Read More »

ஒன்றுபட்டுப் போராடினால் எதையும் மாற்ற முடியும்! கனடாவில் தமிழ் மக்கள் ……

மக்கள் சக்தி ஒன்றுபட்டுப் போராடினால் இந்த உலகில் எதையும் மாற்ற முடியும் என்பதைக் கனடாவில் தமிழ் மக்கள் மீண்டும ஒருமுறை நிரூபித்துள்ளனர் 253 பள்ளிகளைத் தன்னகத்தே கொண்டு 155,000 க்கும் மேற்பட்ட (தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட ) மாணவர்களைக் கொண்ட கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்திய பாடசாலைக் கல்விச் சபை, இவ்வாண்டு மே 18, 2020இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் “இன்று தமிழர் இனப்படுகொலை நினைவு நாள்” என்று குறிப்பிட்டு நினைவுகூர்ந்து வெளியிட்ட கீச்சக செய்திக்கு தமிழ்மக்கள் நன்றியையும் சிறிலங்கா ...

Read More »