போலிமனிதர்களை எம் தமிழ் தேசிய அரசியலில் இருந்து நீக்குங்கள்- சசிகலா ரவிராஜ்

போலி மனிதர்களை எமது தமிழ்தேசிய அரசியலில் இருந்து நீக்கி எம் இனத்தின் வீரத்தை உரிய நேரத்தில் வெளிக்காட்டுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்தேசிய தலைமையின் பிள்ளைகள் நாம் யாரை ஆதரிக்கவேண்டும்,யாரை நீக்கவேண்டும் என்ற முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனது மனதில் இருந்தவற்றை தெளிவாக தெரிவித்துவிட்டேன்,தமிழ்தேசியம் வெல்வதற்கு நீங்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை நீக்கவேண்டும் என்பதை நீங்கள ஊகித்துவிட்டதை உளமாற உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் களப்பணியை எந்த ஒரு தயக்கமும் இன்றி போலிமனிதர்களை எம் தமிழ் தேசிய அரசியலில் இருந்து நீக்கி எமது இனத்தின் வீரத்தை உரிய நேரத்தில் வெளிக்காட்டுங்கள் என அவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.