Tag Archives: ஆசிரியர்தெரிவு

கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நேற்று நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் ஏப்.21, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான பரிந்துரைகளை செயற்படுத்துவதில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க ஆயர்கள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆய்வு செய்ததாகவும் அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் கூறினர். குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள், ...

Read More »

ஜனாதிபதி முதலில் மனித உரிமைகள் பற்றிய படிப்புக்காக பாலர் பாடசாலை செல்லவேண்டும்

நாட்டை கட்டியெழுப்பவேண்டுமென்றால் மனித உரிமைகள் குறித்து கற்பதற்காக ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு செல்லவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றியஉரையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது வெளிநாட்டு நாணயத்துடன் தொடர்புபட்ட சகல விதமான விடயங்களும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் பல்வேறு விடயங்களில் தங்கியிருப்பதை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இவ் விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் இந்த விடயம் பற்றி மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் காணப்படுகின்றன. அதைப் பற்றி நான் இங்கு கேட்க ...

Read More »

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் உண்மையான மூளைசாலி யார்?

இலங்கை வாழ் கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, ‘கறுப்பு ஞாயிறு’ ஆக, அனுஷ்டித்தனர். அந்த அமைதிவழிப் போராட்டத்துக்கு, ஏனைய மதத் தலைவர்களும் ஆதரவளித்தனர். இன்னும் சில மதத் தலைவர்கள், தேவாலயங்களுக்குச் சென்று, எதிர்ப்புப் போராட்டத்திலும் இணைந்துகொண்டனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின்  உண்மையான  மூளைசாலி யார் என்பதை வெளிப்படுத்துவதே எமது முயற்சியாகும் என்றார். ‘கறுப்பு ஞாயிறு’ எதிர்ப்புப் பேராட்டம், கொழும்பு, கொச்சிக்கடை புனித ...

Read More »

அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களின“ நிலை என்ன?

கடந்த மார்ச் 1ம் திகதி, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஆஸ்திரேலியாவின் கங்காரூ பாய்ண்ட் ஹோட்டலிலிருந்தும் பிரிஸ்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 25 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி 20ம் திகதி முதல் இதுவரை 115 அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்றதாக சுமார் 8 ஆண்டுகளாக கடல் கடந்த தடுப்பிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகதிகள் பல ஆண்டுகள் கழித்து விடுவித்துள்ளமை குறித்த ...

Read More »

வடக்கில் நேற்று நால்வருக்கு கொவிட்-19 தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னாரில் நேற்று ரயிலில் மோதி உயிரிழந்தவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ...

Read More »

கறுப்பு ஆடையணிந்து ஆராதனைகளில் ஈடுபட்ட கத்தோலிக்க மக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கத்தோலிக்க மக்கள் கறுப்புஆடையணிந்து ஆராதனைகளில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கறுப்புஞாயிறை கடைப்பிடிக்கும் கத்தோலிக்கமக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

நியூஸிலாந்தில் 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நியூஸிலாந்தில் 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் கிழக்கு பகுதியில், ஒக்லாந்து நகரில் இருந்து சுமார் 256 மைல்கள் தொலைவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியைச் சுற்றி 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை ...

Read More »

சட்டங்கள் உருவாக்கியவர்களுக்கு எதிராகவே மாறலாம்!

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில் இவ்விடயத்தில் மிகவும் நெருக்குதலான சட்டங்கள் அதனை உருவாக்கியவர்களுக்கு எதிராகவே திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுகள் போன்றவற்றைத் தடைசெய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் ஏற்றவகையில் வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது. மக்கள் கருத்துச்சுதந்திரத்திற்குப் பெரிதும் மதிப்பளிக்கிறார்கள். எனவே அதனைக் குறைப்பதற்கான அல்லது ...

Read More »

உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை அழிக்க முயற்சி!

எங்களை போராட்டக் களத்திலிருந்து அகற்றுவதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முற்றிலுமாக ஈடுபட்டு வருகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் தமது குடும்பம் வரை இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாங்கள் கடந்த பதினொரு வருடங்களாக எமது உறவுகளைத் ...

Read More »

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது

கொரோனா வைரஸ் பரவல் கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீத உயர்வு ஆகும். 6 வார காலம் சரிவை சந்தித்து வந்த ...

Read More »