Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஜெனீவா செல்லவிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விசா மறுப்பு!

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 39வது கூட்டத்தொடத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு செல்வதற்கான விசா அனுமதி தமக்கு மறுக்கப்பட்டதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் ;நேற்று 557 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றைய தினம் அவர்களால் முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன்போதே, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி ஈஸ்வரி இதனை தெரிவித்துள்ளார். இதனால், ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் தம்மால் கலந்து சாட்சியமளிக்க ...

Read More »

குடும்பத்தையும் கொன்றுவிட்டு சடலங்களுடன் 6 நாட்கள் தங்கிய குடும்பத்தலைவர்!

அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளி பொலிசில் சரணடைந்துள்ளார். பெர்த்தில் உள்ள வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் ஐந்து சடலங்களையும் கைப்பற்றிய நிலையில். இறந்தவர்களின் பெயர்கள் மரா (41), பெவர்லி குயின் (73) அலீஸ் (2), பீட்ரிக்ஸ் (2) மற்றும் சரோலேட் (3) என தெரியவந்தது. இந்நிலையில் ஐந்து பேரையும் கொலை செய்ததாக மராவின் கணவர் ஆண்டனி ராபர்ட் (24) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கூர்மையான ...

Read More »

ஒன்பிளஸ் 6டி மாடலில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாள் முழுக்க பலமுறை ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்கிறோம், ஸ்கிரீன் அன்லாக் இந்த வழிமுறை எண்ணிக்கையை குறைக்கிறது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக் வசதியை சேர்ப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் மொபைலை அன்லாக் செய்ய ஆப்ஷன்கள் கிடைக்கும்,” என ஒன்பிளஸ் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் தெரியவந்துள்ளது. இத்துடன் அக்டோபர் 17 என்ற தேதியும் இடம்பெற்று இருப்பதால் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரீன் அன்லாக் பெயரில் ஒன்பிளஸ் ...

Read More »

ஐஎஸ்ஐ தான் உலகின் சிறந்த உளவுத்துறை!-இம்ரான் கான்

ஐஎஸ்ஐ தலைமைச் செயலகத்தை முதன் முதலாகப் பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் , ஐஎஸ்ஐ உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் இண்டெர் சர்வீஸஸ் இண்டெலிஜென்ஸ் என்பதுதான் ஐஎஸ்ஐ அழைக்கப்படுகிறது. இதற்கு இம்ரான் தன் அமைச்சரவை சகாக்களுடன் வருகை தந்தபோது அதிகாரிகள் பிரதமர் இம்ரானிடம் அவர்களது பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர். “பாகிஸ்தான் பிரதமர் ஐஎஸ்ஐ தேசப்பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டியுள்ளார், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் ஐஎஸ்ஐ-யின் பாராட்டுக்குரிய செயல்களை விதந்தோதினார். ...

Read More »

ஹபீஸ் சயீத்தின் இயக்கம் தனது பணிகளை மேற்கொள்ள அனுமதி!

ஹபீஸ் சயீத்தின் ஜேயூடி இயக்கம் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத், ஜே.யூ.டி என்ற அமைப்பையும் அந்த அமைப்பு மூலமாக தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பலாஹி இன்சனியாத் பவுண்டேஷன் (FIF) என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். ஐக்கிய நாடுகள் அவையின் தடைப்பட்டியலிலும் உள்ள ஹபீஸ் சயீத்தின் இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு அண்மையில் தடை விதித்தது. ...

Read More »

புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் திரும்பியவர் சிறிலங்கா காவல் துறையால் தாக்கப்பட்டார்!

சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரால் சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உடுவில் பகுதியைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவருமான மொறிஸ் அருணாச்சலம் பிரகாஷ் (வயது -61) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவரே தன்னைத் தாக்கியதாக குடும்பத் தலைவரால் சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அவரால் குற்றஞ்சாட்டப்படும் ...

Read More »

இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்களை மடக்கி பிடித்த மக்கள்!

பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர்.இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களையும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மக்கள் குடியிருப்புக்குள் இரணுவமுகாம் இருப்பதால் ...

Read More »

103 வயதிலும் விவசாயம் செய்து வரும் மூதாட்டி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்கிற ரங்கம்மாள் (வயது 103). இவர் 1914-ம் ஆண்டு தேவனாபுரம் கிராமத்தில் பிறந்தார். தனது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து விட்டார். இவருடைய பாட்டி இவரையும் இரு சகோதரிகளையும் தேக்கம்பட்டி அழைத்துவந்து அங்கு மளிகை கடை வைத்து தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பாட்டி இறந்த பிறகு மளிகை கடையை பாப்பம்மாள் எடுத்து நடத்த தொடங்கினார். இதே கிராமத்தில் ஓட்டலும் வைத்துள்ளார். சிறுக, சிறுக சேர்க்கப்பட்ட பணத்தில் தேக்கம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். நேற்று இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...

Read More »

வடக்கு கிழக்கில் பொது வாக்ககெடுப்பு நடத்துமாறு கோரிய பிரேரணை!

சிறிலங்காவை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 131வது அமர்வு ​நேற்று (11) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, கடந்த அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் ...

Read More »