Tag Archives: ஆசிரியர்தெரிவு

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கிராம மக்களால் சிறப்பு பொங்கல் வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றது . இந்த பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த பிக்கு ஒருவர் குருகந்த ரஜமஹா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றை அமைத்துள்ளதுடன் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்றினையும் அமைத்துள்ளார் . சர்சைக்குரிய இந்த ஆலயம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 6ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஆலயத்துக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து இன்று கிராம மக்கள் இணைந்து பொங்கல் பொங்கி ...

Read More »

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்!

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன்  அதுரலிய ரத்ன தேரருக்கு  ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார். இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் ...

Read More »

இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்!

தனது மனைவியை கொலை செய்த Ahmed Seedat என்ற கணக்காளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெர்த் நகரின் Carlisle பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி தனது 32 வயது மனைவியான Fahima Yusuf என்பவரை Ahmed Seedat இரும்புக்கம்பியால் அடித்துக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்புறம் புதைத்திருந்தார். Fahima Yusuf கொலைசெய்யப்பட்ட சமயம் அவர்களது 5 வயது மற்றும் 2 வயதுப் பிள்ளைகள் மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். தனது மனைவியைக் கொல்ல வேண்டுமென்பது Ahmed Seedat-இன் நீண்டநாள் ...

Read More »

குடிசையில் வாழும் மத்திய மந்திரி!

மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி ஒருவர் மிகவும் எளிமையாக, தெருவோர குழாயில்  குளித்து குடிசையில் வாழ்ந்து வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உள்பட 58 பேர் நேற்று மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். 42 வயது முதல் 71 வயது வரை இளமையும், அனுபவமும் கொண்ட கலவையான அமைச்சரவையாக மோடியின் புதிய அமைச்சரவை அமைந்து உள்ளது. மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ...

Read More »

ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­தல்!

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள நாடாளு­மன்ற தெரிவுக்குழுவில் இடம்­பெறும் விட­யங்­களை அறிக்­கை­யிட ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எச்­ச­ரித்­துள்­ளது. சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்ட அக்­கட்­சியின் பிரதி தலைவர் நிமல் சிறி­பால சில்வா, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர மற்றும் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திஸா­நா­யக்க ஆகி­யோரே இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­தனர். இது ...

Read More »

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அதுரலிய ரத்ன தேரர்!

அதுரலிய ரத்ன தேரர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேரர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதுடன் பொதுமக்களும் குறித்த உண்ணாவிராதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

நீங்கள் வித்தியின் ஆட்கள் தானே? பசில் கேட்டார் ஒரு கேள்வி!

இரகசிய ஏற்பாடு ஒன்றின் அடிப்படையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தகவல்கள் தெரியவந்துள்ளன. கடந்த 26 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை ஜனநாயகப் போராளிகள் முதலில் சந்தித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் வரவுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலேயே குறித்த சந்திப்புக்கள் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் ...

Read More »

யாழ். இராணுவசோதனைச் சாவடியில் குண்டுத்தோசை குண்டானது!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை  பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த  சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. தீவகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவி ஒருவர் தனது உணவாக குண்டுத்தோசை எனப்படும் தமிழர்களின் பாரம்பரிய உணவினை எடுத்துச் சென்றுள்ளார். அவர் தீவகத்திலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு நுழையும்  இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைக்காக இறக்கிவிடப்பட்ட நிலையில் சோதனையினை மேற்கொண்ட  இராணுவத்தினர்  சாப்பாட்டு பெட்டியைக் ...

Read More »

யாழ். போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி !

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி நிரந்தரமாக (இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில்) சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறும்வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்ற முடியும். மார்ச் 27 ஆம் திகதிய அமைச்சரவை அனுமதியுடன் இலங்கையில் உள்ள ஒன்பது வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு நிரந்தரப் (இடமாற்றம் அற்ற) பணிப்பாளர் பதவிக்கு சிரேஸ்ட வைத்திய நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு சீமாட்டி ...

Read More »

உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும்!

உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார். உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ...

Read More »