அதுரலிய ரத்ன தேரர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அமைச்சரான ரிசாத் பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேரர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதுடன் பொதுமக்களும் குறித்த உண்ணாவிராதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal