உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்!

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன்  அதுரலிய ரத்ன தேரருக்கு  ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார்.

இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.