Tag Archives: ஆசிரியர்தெரிவு

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ – களம் இறக்கினார் பிரேசில் அதிபர்!

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் படைகளை அதிரடியாக களம் இறக்கி பிரேசில் நாட்டின் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது. மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு ...

Read More »

அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா!

  அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் ...

Read More »

காட்டிற்காக எங்கள் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார்!

எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என  பிரேசிலி;ன் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை தீட்டியவாறு அம்பு மற்றும் ஏனைய ஆயுதங்களுடன்  காடுகளை அழிப்பவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரேசிலின் அமேசன் மழைக்காடுகள் அமோஜோனஸ் மாவட்டமாநிலத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முரா பழங்குடியினத்தவர்கள் வாழ்கின்றனர். முரா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுள்ள பாரிய காடழிப்புகளை ...

Read More »

தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா ?

சிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்கிணேஷ்வரன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Read More »

‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய மாணவர்கள்

கார்பன் மாசுவை குறைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர்கள் ‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வருகின்றனர். கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் சூரிய மின்சக்தி(சோலார்) மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோவை வடிவமைத்து இருக்கின்றனர். இந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 பயணிகள் அமரலாம். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும், இந்த எலெக்ட்ரிக், ஆட்டோவை ஒரு முறை ‘சார்ஜ்’ செய்தால், 300 கி.மீ வரை பயணிக்கும். ஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கி.மீ இந்த ...

Read More »

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம்!-இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது

ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவரையே வியாழக்கிழமை கைது செய்ததாக  காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை  அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். குறித்த புலனாய்வு உறுப்பினர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 2008 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 3 ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் ஊடகவியலாளர் நாமல் பெரேரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் குறித்த இராணுவ புலனாய்வு ...

Read More »

டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்!

டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தனை கண்டு கொள்ளவே இல்லை. எனவே, இந்தியாவில் பெரிய அளவில் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஏராளமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஸ்-இ- ...

Read More »

’நிறைவேற்று ஜனாதிபதி முறையை நிச்சயமாக ஒழிப்போம்’!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தாம் முன்னின்று செயற்படுவோம் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைக் கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என முன்னதாக உறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read More »

முக்கிய விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை  பதில்  காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட முக்கியமான ஆறு சம்பவங்கள் தொடர்பில் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதனை காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை  அத்தியட்சர்கள் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக, குறித்த அறிக்கைகளை நாளை ( 23)  அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, ...

Read More »

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!

ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே-யில் இன்று தொடங்கியது. போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்க வேண்டும். மழை ...

Read More »