தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா ?

சிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்கிணேஷ்வரன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.