Tag Archives: ஆசிரியர்தெரிவு

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிய கங்காரு!

அவுஸ்திரேலியாவில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த சாம்பல் நிற ஆண் கங்காரு ஒன்று அதிகாரிகளைக் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம்(14) இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் வனப்பாதுகாப்பு அதிகாரிகளான ஜிம் மற்றும் லின்டா ஸ்மித் ஆகியோருக்கு கண், காது, முதுகு மற்றும் கைகளில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கும்பலாக இருந்த கங்காருகளுக்கு ஸ்மித் உணவு கொடுக்கப்பட்டிருந்த போது ஆண் கங்காரு ஒன்று குழம்பமடைந்து அவரைத் தாக்கியுள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக நிலைகுலைந்த ஸ்மித் கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது ...

Read More »

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் யாழ். ஐ.நா அலுவலகத்தில் மகஜர்!

கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக நேற்று15 10 2018 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் வரையான நடைப்பயணம் மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் ...

Read More »

பாகிஸ்தான் இடைத்தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு!

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் 11 நாடாளுமன்றத் தொகுதிகள், பஞ்சாப் மாகாணத்தில் 11 சட்டசபை தொகுதிகள், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் 9 சட்டசபைதொகுதிகள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் தலா இரு சட்டசபை தொகுதிகள் ...

Read More »

11 பேர் கடத்தல் விவகாரம் ! சட்டமா திணைக்களம் பச்சைக் கொடி!

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்ய சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது. இதுவரையிலான விசாரணைகளில் இந்த கடத்தல்கள், காணாமல் அகக்ப்பட்டமை தொடர்பில் குறித்த தளபதி பூரணமாக அறிந்திருந்தார் என்பதற்கான பல சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே சி.ஐ.டி. அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனிடையே இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ...

Read More »

இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமானார்!

எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர் முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது ஒருநாள், என்னுடையதும் அம்மாவினுடையதும் உள்பட பல நூல்களை எழுதியவர். நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எழுத்திலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் இயங்கி வந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாகப் பங்களிப்புகளைச் செய்து வந்தவர்.. நிர்வாக உத்தியோகத்தராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமை மூடிவிடுக!-ஐநா

அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. யுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். நவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் ...

Read More »

குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு வானிலை அறிக்கை வாசித்த தொகுப்பாளர்!

மின்னெஸோடாவைச் சேர்ந்த வானியல் நிபுணரான சூசி மார்டின், சர்வதேச குழந்தை சுமக்கும் வாரத்தை ஆதரிக்கும் பொருட்டு, தொலைக்காட்சியில் தனது குழந்தையுடன் தோன்றி வானிலை அறிக்கை வாசித்துள்ளார். சூசி குழந்தையுடன் வானிலை அறிக்கை வாசித்த காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்ட சூசி, கைக்கடக்கமான உதவியாளர் என்று அந்தக் குழந்தையை அறிமுகம் செய்துவிட்டு தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். இந்த காணொளியில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் சூசியின் குழந்தைக்கும் பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். வேலையைச் செய்யும்போதே இப்படி குழந்தையைக் கட்டிக்கொள்வது தான் ...

Read More »

பாடகி சின்மயின் துணிச்சலை பாராட்டுகிறேன்!-நதியா

உலக அளவில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறித்து metoo மூலம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி குற்றசாட்டு குறித்து நடிகை நதியா கூறுகையில், இப்படி பல பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து பேசினால், குற்றம் செய்தவரின் பெயரை வெளியிட்டால் அவர்களுக்கு பயம் வரும் அதனால் பெண்கள் முன்வந்து இதுபோன்று பேசவேண்டும். ஆண்கள் தங்கள் உரிமைக்காக பேசுகின்றனர். அதுபோல் ...

Read More »

எல்லை நிர்ணய மீளாய்வு குழு அறிக்கை வெளியான பின்னரே தேர்தல்கள் குறித்து நிலைப்பாட்டுக்கு வர முடியும்!

தேர்தல் முறைமை குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என அதன் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியும் எனவும் தெரிவித்தார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More »

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி கடந்த ஒன்பதாம் திகதி கால்நடை பேரணியை ஆரம்பித்த யாழ்பல்கலைகழக மாணவர்கள் இன்று மதியம் அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைந்தனர். இவ்வாறு அனுராதபுரம் சிறைக்கு சென்ற மாணவர்களில் சிலருக்கு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது அதேவேளை ஏனைய மாணவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் விவகாரத்தில் நல்லிணக்க அரசாங்கத்தின் போக்கை கண்டித்து ...

Read More »