பாடகி சின்மயின் துணிச்சலை பாராட்டுகிறேன்!-நதியா

உலக அளவில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறித்து metoo மூலம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சின்மயி குற்றசாட்டு குறித்து நடிகை நதியா கூறுகையில், இப்படி பல பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்த அநீதிகள் குறித்து பேசினால், குற்றம் செய்தவரின் பெயரை வெளியிட்டால் அவர்களுக்கு பயம் வரும் அதனால் பெண்கள் முன்வந்து இதுபோன்று பேசவேண்டும்.

ஆண்கள் தங்கள் உரிமைக்காக பேசுகின்றனர். அதுபோல் பெண்களும் பேச வேண்டும். இதைப்பற்றி பெண்கள் பேசுவது மிகவும் நல்லது நான் அதை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.