எல்லை நிர்ணய மீளாய்வு குழு அறிக்கை வெளியான பின்னரே தேர்தல்கள் குறித்து நிலைப்பாட்டுக்கு வர முடியும்!

தேர்தல் முறைமை குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என அதன் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை வெளியானதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.