Tag Archives: ஆசிரியர்தெரிவு

ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு கிரெட்டா பதிலடி!

காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், தன் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு அவருக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டடிருந்தது. இதனைத் தொடர்ந்து ...

Read More »

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயற்சி!

முன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள்  நல்லிணக்க ஆணைக்குழுவின்  பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்துவெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவி;த்துள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை  மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.   2002 பெப்ரவரி 27 ...

Read More »

நியூஸிலாந்தின் வைட் தீவிலிருந்து ஆறு சடலங்கள் மீட்பு!

நியூசிலாந்தில் சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, வெடிப்பில் சிக்குண்ட 6 பேரின் சடலங்களை மீட்புப் படையினர் இன்றைய தினம் மீட்டெடுத்துள்ளனர்.   இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதற்காக அங்கிருந்து கப்பல் மூலம் வெலிங்டனுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனோர் இருவரையும் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எரிமாலையானது மீண்டும் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள படையினர், மீட்பு பணிகளை முமமுரமாக ஆரம்பித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த எரிமலை வெடிப்பின்போது அவுஸ்திரேலியாவைச் ...

Read More »

போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்!

பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார். 50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பிரதானமான கட்சிகளான பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ், ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ...

Read More »

இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு உறுதியாக தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தால் இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஒவ்வொரு தொடரின்போதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது பிங்க்-பாலில் விளையாட மறுத்துவிட்டது. தற்போது முதல்முறையாக வங்காளதேச அணிக்கெதிராக பிங்க்-பால் பகல் இரவு ஆட்டத்தில் விளையாடியது. இதனால் 2020 – 2021 தொடரின்போது இந்தியா பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என நம்புகிறது. மேலும் நான்கு ...

Read More »

டைம் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு !

காலநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடிய சுவீடன் நாட்டு மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 1927ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டவட்டர்களில் 16 வயதுடைய கிரேட்டா துன்பெர்க் தான் மிகவும் இளையவர். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புகளை புறக்கணித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டெக் மிகவும் பிரபலமானது. அந்த ...

Read More »

கோதுமை மாவின் வரியைக் குறைக்க அமைச்சரவை அனுமதி!

கோதுமை மாவின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடுகிறது!

அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர், பிரதமர்  ஆகியோர் உத்தியோகபூர்வமாக பங்குப்பற்றுவார்கள். அத்தோடு எதிர்க்கட்சித் தலைவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவிற்குஅரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்றம் கூடி எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி ஏற்காமையினாலேயெ இதற்கான காரணமாகும். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். ஹட்டனில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போதும் இந்த காட்டுத்தீ முழுமையாக ...

Read More »