அதிக வாசிப்பு

விச பால் உறுதியானால் கடும் தண்டனை!

கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசம் கலந்த பால் பக்கெட் கொடுக்கப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படும் என காவல் துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த பால் பக்கெட் கொழும்பு யுனியன் பிளேஸில் வைத்து வழங்கப்பட்டுள்ளமை அறியவந்துள்ளதாக கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் காவல் துறை மா அதிபர் லலித் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஆஸ்திரேலியாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் ...

Read More »

100 மில்லியன் டொலர்கள் யாருக்கு ?

அவுஸ்திரேலியாவின் Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் அடுத்த வாரத்திற்கான தொகை சுமார் 100 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.  எதிர்வரும் வியாழக்கிழமை இந்த சீட்டிழுப்பு இடப்பெறவுள்ளது. இந்த 100 மில்லியன் டொலர்களை யாராவது வென்றுவிடும் தருணத்தில் அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக தனிநபர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிகக் கூடிய தொகை என்ற சாதனை பதிவு செய்யப்படும். இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு Hervey Bay -ஐச் சேர்ந்த தம்பதியர் 70 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஐந்து பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது!

5 அவுஸ்திரேலியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த ஐந்து பேரும் இனி அவுஸ்திரேலியா திரும்ப முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியக் குடியுரிமை உட்பட இரட்டைக் குடியுரிமை கொண்ட குறித்த ஐவரும் மத்திய கிழக்கில் தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த ஐந்து பேரும் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விழுமியங்களுக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) தெரிவித்துள்ளார். 20 – 30 வயதுகளில் இருக்கும் ஐந்து பேருடைய குடியுரிமையே இவ்வாறு ...

Read More »

யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S .A எழுத்துப்பதித்த தங்க மோதிரம் !

யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றயதினம் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டிலிருந்து எஸ்.ஏ (S.A) என ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த தங்க மோதிரம் ஒன்று கைப்பற்றப்பட்டிருந்தாபோதும் அவ்விடயத்தினையும் அதிகாரிகள் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ் கோட்டையை இராணுவத்திடமிருந்து கைப்பற்றி புலிக்கொடி ஏற்றிய விடுதலைப் புலிகள் அக் கோட்டை தமிழரின் அடிமைச் சின்னம் எனக் கருதி அதனை கைதிகளைக் கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் ...

Read More »

குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐநா கோரிக்கை!

அண்மையில் நாடுகடத்தபட்ட தீலீபன் என்ற இளைஞரின் சம்பவத்தை சுட்டிகாட்டியுள்ள ஐநா அகதிகளுக்கான நிறுவனம், குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலுக்கு கவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசிடம் குறித்த இளைஞரை நாடுகடத்தவேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட போதும், தங்களால் அந்த நாடுகடத்தலை தடுக்கமுடியாமல் போனமை கவலை அளிப்பதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் இத்தகைய குடும்பங்களை பிரிப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் அகதிகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: UNHCR, the UN Refugee Agency, ...

Read More »

விசா நிராகரிக்கப்படுவோர் விரைவான நடவடிக்கை எடுப்பது அவசியம்!

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சகோரிக்கை விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக நிராகரிக்கப்பட்டுவருகின்றது. இன்று மனைவிக்கும் மகளுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில் திலீபன் என்ற 30 வயதுடைய இளைஞர் ஒருவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். குறுகிய காலஅவகாசம் வழங்கப்பட்டே இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதால் போதிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் கிடைப்பதில்லை என அகதிகளுக்கான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக தமிழ்ச்சமூக செயற்பாட்டாளர்களையோ அல்லது அகதி தஞ்சகோரிக்கைகளை கையாளுகின்ற சட்டவாளர்ளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை ...

Read More »

தமிழ் இளைஞர் சிட்னியிலிருந்து நாளை நாடுகடத்தல்! எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் நாளை திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார். அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார். எனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். கடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறிய இந்தியப் பெண்ணின் சோகமுடிவு!

இரண்டு குழந்தைகளின் தாயான சுப்றாஜ் தனது நான்கு மாத குழந்தையுடனுன் மேல்மாடியிலிருந்து குதித்து இறந்தமைக்கு அவரது தனிமை உணர்வு தான் காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூலை மாதம் 14 ஆம் திகதி 2016 அன்று நடந்த இச்சம்பவம் பற்றிய விசாரணை முடிவிலேயே நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் மனவழுத்தம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றது என்றும் இதனை சுகாதார பிரிவு கவனத்திற்கொள்ளவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மனவழுத்தம் தொடர்பான விசாரிப்புகளின்போது அதுபற்றிய கவலைகளை வெளியிட்டிருக்கவில்லை எனவும் நான்கு தடவைகள் அவரது வீட்டிற்கு ...

Read More »

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த அண்ணன்!

தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றுவதற்காக சகோதரன் தனது உயிரை பணயம் வைத்து இறந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் ஜோன் எட்வேட்ஸ் என்ற நபர் தனது மகனையும் மகளையும் சுட்டுக்கொன்ற சம்பவம் சிட்னியில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 15 வயது ஜக் எட்வேட்ஸ் தனது தந்தையின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து சகோதரியை காப்பற்றுவதற்காக உயிர்விட்டமை தற்போது தெரியவந்துள்ளது. தந்தை துப்பாக்கியுடன் தாயின் வீட்டிற்கு வந்த வேளை சிறுவன் தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளான். ...

Read More »