கொட்டுமுரசு

வடக்கில் நேற்று 126 பேருக்கு கொவிட் தொற்று

புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 2, 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 65 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 438 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 65 பேர், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 4 பேர், மல்லாவி ஆதார மருத்துவ மனையில் 3 பேர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 பேர் தொற்றாளர்களாக ...

Read More »

இழப்பிலிருந்து மீள்தல்

கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள்  தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள்.  இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற வள்ளுவன் வாக்கினை அன்றாட வாழ்வில் தினம் தினம் கண்ணூடாகக் காணும் நிலையை கொவிட்-19 ...

Read More »

மாண்டவர்கள் மீண்டெழுதல்

1930 களில் ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட உப்பு வரிக்கு எதிராக இந்தியாவில்மகாத்மா காந்தி ஆரம்பித்த உப்பு சத்தியாக் கிரகபோராட்டம் எனப்படும் சிவில் ஒத்துழையாமை இயக்கம் போன்ற இலட்ச க்கணக்கான மக்கள் ஈடுபடுகின்ற குறிப்பிடத்தக்க மக்கள் இயக்கங்களால் மட்டுமே இலங்கையை மாற்ற முடியும். கொழும்பு பேராயர் கர்தினால்ம ல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு துயரத்திற்கு நீதி வழங்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 21 ஆம் திகதி கறு ப்புக் கொடி ஏற் றுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு கத்தோலிக்கர்கள் கூட அதிக உற்சாகத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை . வெளிப்படையாக கர்தினால் ...

Read More »

தாலிபான் எப்படி உருவாகிறது?

அமெரிக்கா இருபதாண்டுக் காலம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை நிலைநிறுத்தி “மக்களாட்சியை வளர்த்தெடுக்க” பெரும் முயற்சி செய்த பிறகு, நிரந்தரமாக அந்த நாட்டில் தங்கள் படைகள் தங்குவது வியாபாரத்துக்குக் கட்டுப்படியாகாது என்ற நிதர்சன உண்மையால் படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தது. உடனே எந்த தாலிபானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஆப்கானிஸ்தானை மீட்க அமெரிக்கா இருபதாண்டுகளுக்கு முன் படையெடுத்ததோ, அதே தாலிபான் “போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று உடனே மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. அமெரிக்கா நிறுவிய பொம்மை அரசின் தலைவர்கள் தப்பித்து ...

Read More »

அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா?

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்குரிய ...

Read More »

போரும் வைரசும் ஒன்றல்ல

ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று. உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பாக அது போற்றப்படுகிறது.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பரவிய கொழுக்கிப் ...

Read More »

போரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உலக நாடுகள் உதவுமா?

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறத் தவித்துக்கொண்டிருக் கிறார்கள். சில நாடுகள் ஆப்கானியர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளபோதிலும், சில நாடுகள் தங்கள் முடிவைத் தள்ளிப்போடவும் அகதிகளுக்கான தங்களது திட்டங்களை விஸ்தரிக்க விரும்பாமலும் உள்ளன. ரஷ்யாவும் ஆஸ்திரியாவும் ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கிடையில், ஆப்கன் குடிமக்கள், காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கான சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும், நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கவலையோடு இன்னமும் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் விமான ...

Read More »

வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்?

பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந்நாட்களில் இவர் எப்படி உண்மைகளை ...

Read More »

காலத்தாண்டுதலை நிகழ்த்திய நகுலன்

சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் காலத்திலிருந்து கவிதை (1959) எழுதினாலும் நாவல், சிறுகதை பெற்ற கவனத்தை நகுலனின் கவிதை பெறுவதற்குச் சிறிது காலம் பிடித்தது. இது தனிக்கவிதைகள் மூலமாக அல்லாமல், நீண்ட கவிதைகள் மூலமாகவே சாத்தியமாயிற்று. தனிக்கவிதைகளைத் தொடக்கக் காலத்திலும், தனது இறுதிக் காலத்திலும் எழுதியிருக்கிறார். ‘சிலை’ (1959) கவிதையில் சடங்கு வழிப்பட்ட மத நம்பிக்கைகளை, ‘சிலை முன் பல பேசி என்ன பயன்?’ என்று கேள்விக்கு உட்படுத்துகிறார். அதே கவிதையில், ‘சாவுக்கும் அர்த்தமுண்டு/ சம்போகத்தில் நாசமுண்டு’ எனச் சொல்வதன் மூலமாகப் புலன்வழி வாழ்க்கையின் எல்லைகளைச் ...

Read More »

தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பு

தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சீ. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,கோவிந்தன் கருணாகரம், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐநா மனித உரிமை ...

Read More »