செய்திமுரசு

1MDB விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய காவல்துறை

மலேசியாவின் 1MDB நிதி விவகாரத்தில் தொடர்புடைய ஆஸ்திரேலிய நிறுவனங்கள் குறித்து அனைத்துலகச் சட்ட அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்துவதாக அவுஸ்ரேலிய மத்தியப் காவல்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் உருவாக்கிய 1MDB நிதியின் தொடர்பில் குறைந்தது 6 வெளிநாடுகளில் விசாரணை நடைபெறுகிறது. சுவிட்சர்லந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்றவை அவற்றில் அடங்கும். அதன் தொடர்பில் மூன்றரை பில்லியன் டாலருக்கும் மேலான தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அதில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் நியூயார்க், பெவர்லி ஹில்ஸ், லண்டன் ...

Read More »

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம்

சிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்துள்ள நிலையில் அதற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைபில் திருத்தங்களைச் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த ...

Read More »

அட்டவணையை விமர்சித்த வார்னர்

அவுஸ்ரேலியாவில் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த அடுத்த நாளில் இந்தியாவில் டெஸ்ட் தொடர் தொடங்குவதால் அட்டவணையை வார்னர் விமர்சித்துள்ளார். இலங்கை அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி அடுத்த மாதம் 17-ந்திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்கிறது. அடுத்த நாள் 23-ந்திகதி இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா அணி விளையாட இருக்கிறது. அந்த அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ...

Read More »

சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், உதவித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் – இந்தோனேசிய அதிபர் விருப்பம்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இவ்வாண்டுத் தொடக்கத்தில் அவுஸ்ரேலியாவுக்கு வருகையளிக்கும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக Sydney Morning Herald நாளேடு தெரிவித்துள்ளது. இருநாட்டுக்கிடையே நிலவிய ராணுவப் பயிற்சிப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை இருதரப்பு உறவை பெரிதாய் பாதிக்கவில்லை என்பதை  விடோடோவின் பயணம் புலப்படுத்துவதாக அது கூறியது. இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும் வகையில் ஏற்புடைய குறிப்பிட்ட ஒரு திகதி ஆராயப்பட்டு வருவதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு கூறியது.

Read More »

நீச்சல் குளத்தில் விழுந்து இரட்டை குழந்தைகள் பலி!

அவுஸ்ரேலியா நாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 23 மாதம் மட்டுமே ஆன இரட்டை குழந்தைகளுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். குழந்தைகளின் தாயார் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தைகளின் சத்தம் எதுவும் கேட்காததால் வியப்படைந்த தாயார் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, நீச்சல் குளத்தில் இரண்டு குழந்தைகளும் ...

Read More »

சிட்னி சர்வதேச டென்னிஸ்: வோஸ்னியாக்கி வெற்றி

சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி மோனிகா புய்க்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ...

Read More »

ஊழல் புகார் எதிரொலி: அவுஸ்ரேலிய மந்திரி பதவி விலகினார்

அரசுப் பணத்தை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவுஸ்ரேலிய சுகாதாரத்துறை மந்திரி சூசன் லேய் தற்காலிகமாக பதவி விலகியுள்ளார். அவுஸ்ரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் டோனி அபாட்-டை பதவி நீக்கம் செய்த மால்கோம் டர்ன்புல், கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். மால்கோம் டர்ன்புல் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரம், முதியோர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக பதவி வகிக்கும் சூசன் லேய் என்ற பெண்மணியின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் பெருகி ...

Read More »

‘புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும்’

“புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, 70 வருடகாலமாகப் புரையோடியிருக்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது“ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நேற்று (08) தெரிவித்தார். புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளுடன் ஆராயும் முழுநாள் கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம், நேற்று மாலை நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் ...

Read More »

மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்

ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்யப்பட்ட காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை மாவட்டத்தில் ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். விடுதலைப்புலிகளின் காலத்தில் அக்கோட்டையானது அதிக பாதுகாப்புகளை வழங்கி பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அபிவிருத்தி என்ற பேரில் அக்கோட்டையினை பேரினவாதிகள் அழித்தொழிக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் வீரம் பேசும் தமிழ் அரசியல்வாதிகளினாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினாலும் அதனை பாதுகாப்பதற்கு முடியவில்லை. ...

Read More »