செய்திமுரசு

தங்களது லக்கேஜை விமான நிலையத்தில் இருந்து தூக்கி வந்த அவுஸ்ரேலிய வீரர்கள்

அவுஸ்ரேலிய வீரர்கள் தங்களது லக்கேஜ்களை மும்பை விமான நிலையத்தில் இருந்து அவர்களே தூக்கி வந்து வாகனத்தில் ஏற்றினார்கள். இந்தியா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அவுஸ்ரேலிய அணி துபாயில் இருந்து நேற்று மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அவர்கள் தங்களது விளையாட்டு பொருட்கள் அடங்கிய கிட்ஸ் மற்றும் பெரிய பேக்குகள் கொண்டு வந்திருந்தனர். அதை அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு எடுத்துச் செல்லும் வண்டியில் ஏற்றுவதற்கு போர்ட்டர்கள் ஏற்பாடு ...

Read More »

எங்களது இதயம், நினைவு எல்லாம் அவுஸ்ரேலிய தொடர் குறித்துதான்!

எங்களுடைய இதயம் மற்றும் நினைப்பெல்லாம் ஏற்கனவே அவுஸ்ரேலியா தொடர் குறித்துதான் இருக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார். வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரட்டை சதம் அடித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி வரவிருக்கும் அவுஸ்ரேலியா தொடர் குறித்து கூறுகையில் ‘‘இந்த சீசனில் (2016-17) இங்கிலாந்து தொடர்தான் எங்களுக்கு சிறந்த தொடர் என்று நினைத்தேன். ஆனால் 4-0 என நாங்கள் வெற்றி ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்

அவுஸ்ரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (14)அறிவிக்கப்படுகிறது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந் திகதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் மார்ச் 16-ந் திகதியும், 4-வது மற்றும் கடைசி ...

Read More »

கால அவகாசம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றும் நாடகமே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை அரசிற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேலும் இரண்டுவருட கால அவசாகம் வழங்கப்படவேண்டுமா என்பதில் தமிழ் மக்கள் தெளிவுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே இவ்வாறு இலங்கை அரசிற்கு போதுமாக அளவு கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாகம் மேலும் கால அவகாசம் வழங்க முற்படுவதானது இலங்கை அரசாங்கம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காகவே என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்2015 ஆம் ஆண்டு ...

Read More »

அரசியலிலிருந்து ஒதுங்கிவிடத் தோன்றுகிறது -அனந்தி

அரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றுமளவிற்கு சில ஊடகங்கள் காழ்ப்புணர்வுடன் மிக மோசமாக எழுதுவதாகத் தெரிவித்துள்ள அனந்தி சசிதரன் ஒருவரை அடிக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு மோசமாக எழுதாதீர்கள் என்றும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக தான் எக் கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்ற அனந்தி சசிதரனுக்கு மேடையில் பேச இடம் தரவில்லை என அவர் கண்டனம் வெளியிட்டதாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வைத்து சில அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துவதாகவும் அனந்தி கூறியதாக சில ஊடகங்கள் ...

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்: அஜித் வடேகர் கருத்து

இந்தியா – அவுஸ்ரேலியா அணி களுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 23-ம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் வடேகர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி மிகச்சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அந்த அணி வெற்றி பெறுவது அத்தனை சுலபமான விஷயமல்ல. இந்த தொடர் அவுஸ்ரேலிய அணிக்கு சவால் மிகுந்ததாக இருக்கும். இந்திய அணியில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களான கோலி, சேதேஷ்வர் புஜாரா போன்ற ...

Read More »

சாவகச்சேரி தற்கொலை அங்கி! இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகம்!

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் நாள் சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதென தகவல் வெளியானதை தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ரணிலுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்த தயாராகும் புலம்பெயர் சமூகங்கள்!

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை நடத்த தமிழ்சி, ங்கள புலம்பெயர் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கின்றார். தமிழ் மக்களின் தேவைகளை ரணில் அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகக் கூறி புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்பு ஒன்று எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி சிங்கள புலம்பெயர் சமூகமொன்றும் ...

Read More »

நாளை ரணில் அவுஸ்ரேலியா பயணம் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(13) அவுஸ்ரேலியா செல்லவுள்ளார். அந்த நாட்டுப் பிரதமரின் அழைப்பினை ஏற்றே அவர் இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 17ம் திகதி வரை பிரதமர் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரியவந்துள்ளது.

Read More »

இந்திய வம்சாவழி பெண் விண்வெளி பயணம்

இந்திய வம்சாவழியை சேர்ந்த ஷாவ்னா பாண்டியா என்ற பெண், 2018ம் ஆண்டில் விண்வெளி செல்லும் குடிமக்கள் குழுவில் ஒருவராக இணைய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. இதுவரையிலும் பிரத்யேக பயிற்சி பெற்று, விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள நபர்களை மட்டுமே, விண்வெளி வீரர்களாவது வழக்கம். இந்நிலையில், சாதாரண பொதுமக்களையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை, நாசா மேற்கொள்கிறது. வரும் 2018ம் ஆண்டில் நடைபெற உள்ள இந்த குடிமக்கள் விண்வெளி பயணத் திட்டத்தின் கீழ் பங்கேற்க உள்ள ...

Read More »