செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் இந்திய சாரதி மீது இனவெறி தாக்குதல்!

அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா நகரில் இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதி  பெண் உள்பட இரு பயணிகள் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரதிப் சிங்(25) என்பவர் அவுஸ்ரேலியா நாட்டில் விருந்தோம்பல் தொடர்பான பட்டப்படிப்பு படித்து வருகிறார். படிப்பு நேரம் போக ஓய்வாக இருக்கும் வேளைகளில் தற்காலிகமாக வாடகை கார்களை ஓட்டி கைச்செலவுக்கு பணம் சம்பாதிப்பது வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இவரது காரில் ஒரு பெண்ணுடன் ஒருவர் சவாரி சென்றுள்ளார். அவுஸ்ரேலியாவின் தீவுப்பகுதியான டாஸ்மானியா அருகேயுள்ள சாண்டி பே ...

Read More »

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரியோருக்கு காலக்கெடு!

அவுஸ்ரேலியாவிற்குள் படகுகள் மூலம் பிரவேசித்துள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, அகதி அந்தஸ்துகோரி விண்ணப்பிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நான்கு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது பாதுகாப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய குடிவரசு அமைச்சர் பீற்றர் டட்டன் கூறியுள்ளார். ஸ்ரீலங்காவில் இருந்து போருக்கு முன்னரும் போரின் பின்னரும் ஆபத்தான கடல்வழிப்பயணங்களை  மேற்கொண்டு  ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்ரேலியாவில் புகலிட தஞ்சம் கோரியிருந்தனர். இலங்கையை தவிர ஏனைய ஆசிய மற்றும் ...

Read More »

மங்கள மைத்திரியுடன் அவுஸ்ரேலியாவிற்கு பயணம்!

சிறீங்காவில் நாளைய தினம் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு நிதித்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கள் வழங்கப்படலாம் என கடந்தவாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் நாளை மறுதினம் அவுஸ்ரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை முன்னெடுக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பயணம் மேற்கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் சிறீலங்கா ஜனாதிபதி முதலில் கன்பரா செல்லவுள்ளதுடன் ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் & சிட்னி 2017

தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – மெல்பேர்ண் அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் உணர்வெழுசிசியுடன் நடைபெற்ற மே- 18 தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நினைவுநாள். கடந்த 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் சிங்களப்பேரினவாதஅரசினால் தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்புப்போரின்போது காவுகொள்ளப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் எட்டாவது ஆண்டுநினைவுதினமும் காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவான தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் மெல்பேர்ண்நகரில் கங்கேரியன் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 18-05-2017அன்று மாலை 6.30மணிக்கு மண்டப நினைவேந்தல்நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வை செல்வி மது பாலா அவர்களும் (தமிழ்மொழியிலும்) திரு ...

Read More »

20-வது குழந்தையை எதிர்நோக்கும் குடும்பம்!

பிரிட்டனைச் சேர்ந்தவர் நோயல் ராட்போர்ட். இவர் மனைவி சூ. சூ-வுக்கு 14 வயது இருக்கும் போது திருமணம் செய்தார் நோயல். குழந்தைகளின் மீது அதிக பிரியம் கொண்ட இவர்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை கடமையாகவே செய்து வந்தனர். இதனால் பிரிட்டனில், நோயலில் குடும்பம் அவ்வளவு ஃபேமஸ். ’அந்த மெகா குடும்பமா, ஆத்தாடி…19 குழந்தைகளை வச்சுகிட்டு எப்படித்தான் காலம் தள்ளுறாங்களோ?’ மக்கள் பேசிக் கொள்வர். சகல் 4 டாக்குமென்டரியில் இவர்கள் குடும்பம் வந்த பிறகு பிரிட்டனின் சந்துபொந்தெல்லாம் இவர்கள் பிரபலமாகிவிட்டார்கள். அப்படிப்பட்ட குடும்பத்துக்கு செப்டம்பர் மாதம் 20-வதாக ...

Read More »

இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன் தங்கை திருமணம்!

இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன், தங்கை கோடீசுவரரை மணந்தார். அவருக்கு லண்டனில் நேற்று (20) திருமணம்  நடைபெற்றது. 33 வயதாகும் பிப்பா மிடில்டன் கோடீசுவரரை மணக்கிறார். அவரது பெயர் ஜேம்ஸ் மாத்யூவ். இவர்களது திருமணம் லண்டன் அருகேயுள்ள இங்கிலீபீல்டு கிராமத்தில் உள்ள செயின்ட் மார்க் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்றது. இது 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயமாகும். திருமணத்தில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ் (3), இளவரசி சார்லோட்(2) ஆகியோரும் பங்கேற்றனர்.    

Read More »

மைத்­தி­ரி­பால சிறி­சேன செவ்­வாய்­கி­ழமை அவுஸ்­­ரே­லியா பயணம்!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை மறுநாள் செவ்­வாய்­கி­ழமை உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு அவுஸ்­­ரே­லியா செல்­கின்றார். மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மைத்திரி அவுஸ்­­ரே­லிய விஜ­யத்தில் கலந்து கொள்­வ­து­டன் ­அங்கு பல­த­ரப்­பட்ட நிகழ்­வு­க­ளிலும் பங்­கு ­பற்ற உள்ளார். மேலும், அவுஸ்­­ரே­லியா வாழ் இலங்­கை­யர்­களை சந்­தித்து விசேட உரை­யாற்­றவும் உள்ளார்.

Read More »

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வலியுறுத்தி இப்போராட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடைபெறவுள்ளது. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்தில் வடக்கு- கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினர், காணாமல் போனோர்கள், தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரின் உறவினர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் ...

Read More »

அவுஸ்ரேலியா செல்ல அனுமதி கோரும் யோஷித ராஜபக்ஷ!

வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வௌிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டிருந்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார். குறித்த ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு சென்றுகொண்டிருக்கும் போது கைதான மியன்மார் மக்கள் நாடுகடத்தவேண்டாம் என வேண்டுகோள்!

தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்கள் கோரியுள்ளனர். இவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்புடன் கலந்துரையாட இருப்பதாக கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்களுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் வழக்கறிஞர் ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான அமைப்பில் தஞ்சம் கோரியிருந்த ரோஹிஞ்சா இனத்தவர்களில் முப்பது பேர், சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், இலங்கையின் கங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ...

Read More »