செய்திமுரசு

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்க அவுஸ்ரேலியா ஒப்புதல்!

அமெரிக்காவுடன் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து, எல்-சால்வடார் (El salvador) உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா ஆட்சிக் காலத்தில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரத்து 200 அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டிருந்தது. இவர்களுக்கு பப்புவா நியூகினியா, நவ்ரு தீவுகளில் வாழ்விடங்களை அமைக்கவும் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்களைத் தொடர்ந்து தற்போது கோஸ்டாரிகா, எல் சால்வடார் நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது. ...

Read More »

யாழ்ப்பாணத்தில் பலமுனையில் ஆர்ப்பாட்டங்களும், பணிப்புறக்கணிப்புகளும் இடம்பெறுகின்றன

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிகப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து வட மாகாண தனியார் பேரூந்துகள் இன்று (24) திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று உள்ளூர் மற்றும் ...

Read More »

மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்று எச்சரிக்கை விடுத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட போது இரு இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்துள்ளனர். குறித்த இரண்டு இளைஞர்களும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கரடியனாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் எஸ்.மதுசன் ...

Read More »

மிஸ் வேர்ல்ட் அவுஸ்ரேலியாவாக முஸ்லிம் பெண் தெரிவு!

அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடந்த உலக அழகிப் போட்டியில் Esma Voloder எனும் இளம் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் அகதி முகாமில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.போஸ்னியா எனும் நாட்டில் சண்டை நடந்தபோது அதன் காரணமாக அகதியாக மாறிய அவரின் பெற்றோர் அகதி முகாமில் தங்கியிருந்தபோது அங்கு பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை தான் Miss World Australia அழகியாக தெரிவு செய்யப்பட்டதும், சில நிற வெறியர்கள் தன்னை ஒரு முஸ்லிம் பெண் என்பதால் இழிவுபடுத்துவது கவலைக்குரியது என தெரிவித்தார்.  

Read More »

மனுஸ் தீவு தடுப்பிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியவர்களில் மனுஸ் தீவில் தடுப்பில் உள்ள அகதிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை உத்தியோகப்பூர்வமாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தடுப்பு முகாமிலுள்ள அகதிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதற்கே தமது அரசு விரும்புகிறது என தெரிவித்துள்ளார். அமெரிக்கா வருடமொன்றுக்கு உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கை, அரைவாசியாகக் குறைக்கப்பட்டதால், அக்டோபர் வரை காத்திருக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ...

Read More »

அவுஸ்ரேலிய பெண் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகிய பெண் காவல் துறை தலைமை அதிகாரி!

அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பெண் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று அம்மாநில பெண் காவல் துறை தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார். அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் உள்ள மின்னேபொலிஸ் நகரில் கடந்த 15-ம் திகதி அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 40 வயது யோகா ஆசிரியரான ஜஸ்டின் டாமண்ட், அந்நகர காவல் துறை தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்வபம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் அதிர்வை ஏற்படுத்தியது. ஜஸ்டின் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குஅவுஸ்ரேலிய பிரதமர், மற்றும் ஜஸ்டினின் குடும்பத்தினர் கடும் ...

Read More »

அவுஸ்ரேலியா : ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் வாக்களிப்பு முறையை நடத்தலாம் என அவுஸ்ரேலியா நாட்டின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு அமைச்சர்கள் சிலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு 61 சதவீதத்தினர் தங்களது ஆதரவை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ...

Read More »

“இன்னும் இரு பௌர்ணமி பின்னர் பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது.!” – மஹிந்த ராஜபக் ஷ

தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் ...

Read More »

டெங்கு ஒழிப்பிற்காக அவுஸ்திரேலியாவால் சிறிலங்காவிற்கு உதவி!

இலங்கையில் டெங்கு ஒழிப்பு திட்டத்திற்காக உலக சுகாதார நிறுவனம் ஊடாக 475,000 அவுஸ்திடரேலிய டொலர்களை (ரூபா 58 மில்லியன்) அவுஸ்திரேலியா உடனடியாக வழங்கும் என்று அவுஸ்திரேலிய அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது. டெங்கு நோய் சவாலில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா முடிந்தளவு உதவி வழங்கும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் ...

Read More »

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப்- சம்பந்தன் சந்திப்பு!

சிறிலங்காவில் இதுவரை காலமும் அனைத்து மக்களுக்குமான அரசியலமைப்பு உருவாக்கப்படாததாலேயே யுத்தம் ஆரம்பித்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று (20)  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து பேச்சு நடாத்தினார். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். இச்சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சம்பந்தன், நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. அதன் காரணமாகவே யுத்தம் மூண்டது. ஆகவே, ஒரே ...

Read More »