செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்கள் இதைப் படிங்க!

அவுஸ்திரேலியாவில் EFTPOS, MasterCard, Visa, American Express card என வர்த்தக நிலையங்களில் பயன்படுத்தும் போது மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆனால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் Surcharges எனப்படும் மேலதிக கட்டணத்தை அளவுக்கதிகமாக அறவிட முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் 1 முதல் ஆண்டொன்றுக்கு 25மில்லியன் வருமான மீட்டும் பெரிய நிறுவனங்கள் தம்முடைய விருப்பத்திற்கு Surcharges அறவிட முடியாதென கூறப்பட்டிருந்தது. Australian Competition and Consumer Commission (ACCC) ஆல் நியமிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டே இதனை அறவிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2017 ...

Read More »

இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கடிதம் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

ஜெர்மனியை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது. ஜெர்மனியை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது நெருங்கிய நண்பர் மைக்கேல் பெஸ் கோவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடவுள் மற்றும் பல பொருட்கள் குறித்து விவாதித்து இருந்தார். அக்கடிதம் கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் திகதி எழுதப்பட்டது. அது சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

Read More »

கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாதாம்!

“தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது” என்று நம்பிக்கையூட்டிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அவ்வாறு முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலமே சாத்தியமாகும்” என்றும் குறிப்பிட்டார். “சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் பறவாயில்லை, எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை” என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று (30), ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு ...

Read More »

சீனா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்தை சுற்றிப்பார்க்க விமான சுற்றுலா!

இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் சீனா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளை சுற்றிப்பார்க்க விமானச் சுற்றுலாவை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: ஐஆர்சிடிசி சார்பில் பாரத தர்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன. ரயில் மூலம் மட்டுமல்லாமல், விமானம் மூலமாகவும் சென்னையில் இருந்து பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சீனா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்துக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். சீனா – ஜியான் (8 நாட்கள்) செப்டம்பர் 29-ம் ...

Read More »

அவுஸ்ரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சாஹிப் ஆல் ஹசனின் அபார பந்து வீச்சால் அவுஸ்ரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. அவுஸ்ரேலியா – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 260 ரன்களும், அவுஸ்ரேலியா 217 ரன்களும் சேர்த்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் பந்து வீச்சால் வங்காள தேசம் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வங்காள ...

Read More »

சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் தீப்பற்றி எரிந்தது!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொட்டாவ வெளியேற்றப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் இருந்து, பனாகொட இராணுவத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர் எனவும், வாகனம் தீப்பிடிக்க ஆரம்பித்ததும் அவர்கள் வாகனத்திலிருந்து குதித்து தப்பிவிட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது பங்களாதேஷ்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரலாற்றில் தனது முதலாவது வெற்றியை பங்களாதேஷ் அணி பதிவு செய்துள்ளது. பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கமைய, கடந்த 27ம் திகதி ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், இன்று பங்களாதேஷ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளது. முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 260 ஓட்டங்களையும், அவுஸ்திரேலிய அணி 217 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன. இதன்படி, 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த ...

Read More »

பொம்மைகளைக் குழந்தைகளாக நினைக்கும் தாயுள்ளம்!

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் 43 வயது சில்வியா ஹெஸ்ஸெட்ரெனியோவாவுக்கு 57 குழந்தைகள் இருக்கிறதாகச் சொல்கிறார்! இவற்றில் 2 குழந்தைகள் இவர் பெற்றவை. மற்றவை எல்லாம் இவர் உருவாக்கிய பொம்மைகள். நிஜக் குழந்தைகளைப் போலவே பொம்மைகளை உருவாக்குவதில் சில்வியா நிபுணராக இருக்கிறார். 40-வது பிறந்தநாளின்போதுதான் பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்தார். 3 ஆண்டுகளில் 55 பொம்மைகள் சேர்ந்துவிட்டன. கூடம், படுக்கையறை, படிப்பறை, சமையலறை, மாடி என்று வீடு முழுவதும் பொம்மைகள் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பொம்மைக்கும் பல்வேறு நாட்டு ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார். சில பொம்மைகளை ...

Read More »

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் – லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் மீளவும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுப்பதில் படையினர் சிரத்தை காண்பித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “வன்முறைகள் தற்போது சவாலான ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. பயங்கரவாதம் உலக அளவில் வியாபித்துள்ளமை துரதிஸ்டவசமானது. நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தத்தை இலங்கை அரச படையினர் ...

Read More »

அப்பிள் இறக்குமதிக்கு வலியுறுத்திய அவுஸ்ரேலிய அமைச்சர்!

சென்னை, கோயம்பேடு சந்தையில் , பழ வியாபாரிகளுடன் அவுஸ்ரேலிய துணை பிரதமரின் உதவி அமைச்சர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அவுஸ்ரேலிய அப்பிள் வாங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பிள் மற்றும் புளுபெர்ரி பழத்தை இறக்குமதி செய்யுமாறு வியாபாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் 600க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த விலை பழக்கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு வாஷிங்டன், நியூசிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல் மூலம், ஒரு மாதத்திற்கு ...

Read More »