இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கடிதம் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

ஜெர்மனியை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

ஜெர்மனியை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது நெருங்கிய நண்பர் மைக்கேல் பெஸ் கோவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடவுள் மற்றும் பல பொருட்கள் குறித்து விவாதித்து இருந்தார். அக்கடிதம் கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் திகதி எழுதப்பட்டது.

அது சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.