செய்திமுரசு

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி” வடக்குக்கு பயணம்

கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, நேற்றைய தினம் வுவுனியா மாவட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து தாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் அறிந்துகொண்டதாகவும் அதனை யோசனையாக தயாரித்து, ஜனாதிபதியிடம் ...

Read More »

பிரியா நடேசுக்கு ஆஸ்திரேலிய ஊடகம் கௌரவம்!

ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியா – நடேஸ் தம்பதிகள் மற்றும் அவர்கள் குழந்தைகள் பற்றிய செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரியாவுக்கு ‘Woman of the Year’ என்ற கௌரவத்தை ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையொன்று வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில், அதற்கெதிராக முழுக்குடும்பமும் போராடியது, இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பல தரப்புகளிலிருந்தும் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது. இந்தப்பின்னணியில், தனது குடும்பத்தின் இருப்புக்காக போராடிய பிரியாவுக்கு ஆஸ்திரேலியாவின் முக்கிய மாதர் சஞ்சிகையான Marie Claire, ‘Women ...

Read More »

வித்தை காட்டுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்பதையே, நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அதாவது, இதற்கு முன்னைய வரவு செலவுத் திட்டங்களால், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டது என்பதல்ல இதன் அர்த்தம். கடந்த பல தசாப்பதங்களாகச் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களும் இவ்வாறானவைதான். ஆனால் அவற்றில், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் ஏதாவது பிரேரணைகள், குறைந்த பட்சம் இதை விடக் கூடுதலாக இருந்தன. எந்த ...

Read More »

சீன உர விவகாரம்; தடை உத்தரவு நீடிப்பு

சேதன  பசளை தொடர்பில் சீன நிறுவனங்களுக்கு, பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மற்றும் மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இதனை இன்று உத்தரவிட்டுள்ளது. பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் குறித்த நிறுவனங்களுக்கு பணம் வழங்குவதற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சீன நிறுவனத்தால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சேதனை பசளையில் ...

Read More »

தடைகளை தாண்டி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளையும் மீறி மாணவர்களால் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில்  மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று (18) மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளை மேற் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்துக்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு ...

Read More »

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமேசான் மழைக்காடுகள் அழிப்பு

ஐநா பருவநிலை உச்சிமாநாட்டின் போது 2030 ஆம் ஆண்டிற்குள் காடு அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம் 22 சதவீதம் ஆகும். 2006க்கு பிறகு அதிகபட்சமாக, 2020-21ம் ஆண்டில் 13,235 சதுர கிமீ மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பருவநிலை ...

Read More »

ஆஸ்திரேலியா: சிறை வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு இணைப்பு விசாக்கள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் சுமார் 8 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த 4 தஞ்சக்கோரிக்கையாளர்களும் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் தற்காலிக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், இணைப்பு விசாக்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டில் ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

Read More »

9 ஆண்டுகளுக்கு பிறகு என்னை விடுவித்துள்ளனர்: ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த அகதி !

இந்த கணத்தை எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. 9 ஆண்டுகளுக்கு பிறகு என்னை விடுவித்துள்ளனர். ஆனால் எனது நண்பர்கள் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறியுள்ளார் ஈரானிய அகதியான ஹமித் கதிமி. “எனக்கு இணைப்பு விசா கிடைத்து விட்டது. ஆனால் எனது சக நண்பர்களுக்கு (அகதிகளுக்கு) விசா கிடைக்கவில்லை. நாங்கள் ஒரே குடும்பம் போல, ஒன்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கிறோம்… இந்த அகதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும்.”

Read More »

இன்னுமா காணியை தேடுகிறீர்கள்?

கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மலையக பல்கலைக்கழகம் எங்கே என கேள்வி எழுப்பிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், இன்னுமா பல்கலைக்கழகம் அமைக்க காணியை தேடுகிறீர்கள்? எனவும் கேலி செய்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (17) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களால் குறுகிய காலத்திலேயே வெறுத்து ஒதுக்கிய அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது.  எந்தவிதமான சலுகைகளும் இல்லாத வரவு செலவு திட்டமாக இது இருக்கிறது எனவும் தெரிவித்தார். ...

Read More »

‘கிழக்கில் விஹாரை; பெரும்பான்மை குடியேற்றத்துக்கு வாய்ப்பு’

“பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். “பொலன்னறுவை மாவட்ட சொறுவில், ...

Read More »