சீன உர விவகாரம்; தடை உத்தரவு நீடிப்பு

சேதன  பசளை தொடர்பில் சீன நிறுவனங்களுக்கு, பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மற்றும் மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இதனை இன்று உத்தரவிட்டுள்ளது.

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் குறித்த நிறுவனங்களுக்கு பணம் வழங்குவதற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன நிறுவனத்தால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சேதனை பசளையில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற உயிரினங்கள் இருப்பது தெரியவந்த நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு வெளிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.