செய்திமுரசு

அவுஸ்ரேலியப் பெண் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டார்

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரான காபுலில் அவுஸ்ரேலிய நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவன சேவகியை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். ஆப்கானிஸ்தானில் பிணைத்தொகைக்கு ஆசைப்பட்டு அங்குள்ள தீவிரவாதிகளை வெளிநாடுகளை  சேர்ந்த பலரை கடத்திச் செல்கின்றனர். பின்னர், கடத்தப்பட்டவரின் நாட்டை சேர்ந்த தூதரகத்தின் மூலம் பேரம்பேசி, பணத்தை பெற்றுகொண்டு கடத்தப்பட்டவர்களை விடுவிப்பது வாடிக்கையாகி விட்டது. அவ்வகையில், காபுல் நகரின் மையப்பகுதியான கலா-இ-ஃபதுல்லா என்ற பகுதியில் இருந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்த ஒரு பெண்ணை நேற்று துப்பாக்கி முனையில் சிலர் கடத்திச் சென்றதாக ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த இலங்கை பிரஜை!

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு குறிக்கோளை அடையவேண்டும் என்றே கல்வி கற்கின்றான், வைத்தியராக வேண்டும் என்று படித்திருப்பார்கள் மற்றவர்களுக்கு உதவியும் செய்திருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு மத்தியில் இலங்கையில் பிறந்த இளைஞர் ஒருவர் மாறுபட்டு காணப்படுகின்றார். இலங்கையில் பிறந்த தினேஷ் பலிபன(32) என்ற இளைஞர் அனைவரிலும் ஒப்பிடுகையில் வித்தியாசமான ஒருவர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்திய கற்கையை மேற்கொண்டு வந்த போது ஏற்பட்ட விபத்தில் கை, கால்கள் செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் இந்த இளைஞன். பிலிஸ்பேனில் வசிக்கும் ...

Read More »

யோஷிதவின் வீசா விண்ணப்பம் நிராகரிப்பு – அவுஸ்திரேலிய தூதரகம்!

யோஷித ராஜபக்ஸ, அவுஸ்திரேலியா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த வீசா விண்ணப்பத்தை கொழும்பில் உள்ள அந்நாட்டு உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. யோஷித ராஜபக்ஸவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதுடன் வெளிநாடு செல்ல அவர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றிருந்தார். யோஷிதவின் முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவுஸ்திரேலியா செல்ல வீசா கோரி அவர் விண்ணப்பம் செய்திருந்தார். எவ்வாறாயினும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவது மற்றும் மேலும் பல காரணங்களை காட்டி வீசா வழங்க முடியாது என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தனது விண்ணப்பத்தை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன்

அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் இருந்து சுமார் 550 கிலோ மீற்றர் தூரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வாரட்டை குகைதளத்தை மெல்பேர்னின் லா ட்ரோப் பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் கில்ஸ் ஹாம் அவர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மிகப்பழைமையான எலும்புகள் மற்றும் குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட கல்லாயுதங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், எரிக்கப்பட்ட முட்டை ஓடுகள், எலும்புகளால் செய்யப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ...

Read More »

பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு ரூ.2.22 கோடி இழப்பீடு

அவுஸ்ரேலியா நாட்டில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.2.22 கோடி இழப்பீடு வழங்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலியா சமூகப்பணி துறை அமைச்சரான கிறிஸ்ட்டியன் போர்டர் நேற்று(4) பெர்த் நகரில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்குவது மட்டுமல்லாமல் 1,50,000 டொலர்(2,22,03,000 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்புதிய திட்டம் குறித்து பல மாதங்களாக பிரதமர் ஆலோசித்து வந்ததாகவும், தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ...

Read More »

அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

எல்கர் டுமினி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா 52.5-வது ஓவரில் 150-வது ரன்னை தொட்டது. அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 244 ரன் எடுத்தது. 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து ...

Read More »

பண்டைய நாடாளுமன்ற கட்டிடம் ஒன்றில் தீ !

அவுஸ்ரேலிய பண்டைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு பிரிவினால் குறித்த தீ பரவல் அணைக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பண்டைய கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Read More »

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் கைது

சிட்னி Royal Botanic Gardensஇல் உள்ள மரம் ஒன்றின் மீது சிறுநீர் கழித்த இரு ஆண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 66 வயது மற்றும் 41 வயது சீன சுற்றுலாப்பயணிகளான இவர்களை காவல்துறையினர் கைது செய்வதற்காக நெருங்கியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இருவரும் அந்த இடத்திலிருந்து அகல முற்பட்டபோது இரு தரப்பினருக்குமிடையில் இழுபறி ஏற்பட்டது. இதனால் 66 வயது நபருக்கு தோள் மற்றும் கால் பகுதியில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொது இடத்தில் அநாகரிமாக நடந்து கொண்டமை மற்றும் காவல்துறையினருடன் எதிர்த்து நின்றமை உள்ளிட்ட ...

Read More »

IS சந்தேக நபர் சிட்னியில் கைது

சிட்னியின் Birrong பகுதியில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து போரிட்ட மிக ஆபத்தான நபர் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரால் தாக்குதல் அச்சுறுத்தல் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் நீண்ட காலம் நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இக் கைதினை அடுத்து பாரிய தேடுதல் நடவடிக்கை காவல்துறையினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகிறது.

Read More »

அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சலுகை

ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் முக்கிய அம்சம் points test system ஆகும். ஒருவர் Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points test system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் points test system-ல் முக்கிய மாற்றம் அமுல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில்  Science, Technology, Engineering Mathematics மற்றும் Information & communication technology ஆகிய துறைகளில் Doctorate மற்றும் Masters படித்தவர்களுக்கு மேலதிகமாக 5 புள்ளிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »