அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்டனர். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அத்தகைய கொடிய தாக்குதலை, தலிபான்களே தொடுத்தனர் என்பது அமெரிக்காவைச் சீண்டியது. அதனுடைய தொடர்ச்சியாகத் தலிபானுக்கு ...
Read More »செய்திமுரசு
கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்
கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று மருத்துவ ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 33 பேருடைய மூளை மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வை ...
Read More »சிறைவைக்கப்பட்டுள்ள அகதிக்கு தற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்
ஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்பு கலையின் மூலமாக ஆஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான நட்பைக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் Taekwondo உடையுடன் காணொலி அழைப்பின் மூலம் அகதியான மோஸ்க்கு வகுப்பெடுக்கிறார் சிறுவனான கேலம். ஆஸ்திரேலிய அரசால் முதலில் மனுஸ் தீவிலும் பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடத்திலும் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருப்பவர் மோஸ். கேலமின் அம்மாவான ஜேனின் தொடர்பை 2014ல் கடிதம் எழுதும் ஒரு பிரச்சாரத்தின் மூலம் அகதியான மோஸ் பெற்றிருக்கிறார். “எப்போதும் எனக்கு ...
Read More »ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் உள்ள ஈழ தமிழ் அகதி குடும்பம்
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் தடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட ஈழ தமிழ் அகதி குடும்பம் ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் கடந்திருக்கிறது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் ...
Read More »மாரடோனாவின் மரணத்தில் மர்மம்?
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல காற்பந்தாட்ட வீரரா மாரடேனா (Maradona )கடந்த 25ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து மாரடோனாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாரடோனாவின் தனி மருத்துவரின் சொத்து விபரம் குறித்து கணக்கெடுக்கவும், வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன?
இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம் இந்தோ — பசுபிக் ஒத்துழைப்புக்கு இலங்கையை நெருக்கமாக கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்தியாவின் பிரபலமான இணையத்தள செய்திச் சேவைகளில் ஒன்றான ‘த பிறின்ற் ‘ கூறியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகைதந்த ஒரு மாத காலத்திற்குள் அஜித் டோவாலின் விஜயம் இடம்பெற்றிருப்பதால் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் ...
Read More »பரந்தனில் கார்த்திகை விளக்கேற்றியவர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டுள்ளனர். நேற்று மாலை பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காகத்தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதி இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கிவீச்சப்பட்டதாக சம்பந்தப்பட்ட வர்கள் தெரிவித்துள்ளனர். வழமைபோல் கார்த்திகை விளக்கீட்டுக்காக வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வளவின் உள்ளே வந்த இராணுவத்தினர் விளக்குகளைத் தூக்கி வீசியுள்ளனர். அதன் பின்னர் வயோதிபத் தம்பதியினரைத் துப்பாக்கியால் தாக்கவும் முயன்றுள்ளனர். பரந்தன் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே இராணுவச் சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியமையுடன் தாக்க முற்பட்டனர் ...
Read More »யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சான்றிதழை விமான நிலையத்தில் ஏற்க மறுப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் பிசிஆர் பரிசோதனையின் பெறுபேறு செல்லாது என்றும், கொழும்பு நவலோகாவில் புதிய பரிசோதனை மேற்கொண்டு வருமாறும் விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்து நின்றவர்கள் உட்பட வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் அனைவரும் விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணித்தியாலங்களுக்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைச் சான்றிதழை சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இந்த நடைமுறைக்கு அமைய ஆரம்பத்தில் வடக்கிலிருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டசான்றிதழுடன் சென்ற வேளை விமான நிலையத்தில் ...
Read More »பாலியல் வன்புணர்வு: தென் ஆப்பிரிக்கரின் ஆஸ்திரேலிய குடியுரிமை பறிப்பு
ஆஸ்திரேலியாவில் இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய விவகாரத்தில் 9 ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கர் ஒருவரின் ஆஸ்தரேலியாவின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. Robin Gerald Dyers எனும் அறியப்படும் அந்நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் 9 ஆண்டுகள் சிறைக்கு பிறகு அண்மையில் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்ட இந்நபர், விரைவில் தென் ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்று, ஆஸ்திரேலியாவில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் வெளிநாட்டவர்கள், குடியுரிமைப் பெற்ற போதிலும் அவர்களின் குடியுரிமை பறிக்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய ...
Read More »மெல்பேணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள் – 2020
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரர்களை ஒருசேர நினைவூகூரூம் மாவீரராநாள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. கோவிட் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, East Burwood Reserve எனும் இடத்தில் மதியம் 1.20 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் 30 நிமிடங்களுக்கு என முற்பதிவுசெய்யப்பட்ட சுழற்சி முறையில் பலரும் பங்குகொண்டனர். முதன்மைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு லூயின் பிரசாத் அவர்கள் ஏற்றிவைக்க, அவஸ்திரேலியத் தேசியக்கொடியை மருத்துவர் ஆதவன் சிறீதர் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal