செய்திமுரசு

சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்!

“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் தற்போது ...

Read More »

புதிய அமைச்சரவையின் முழு விவரம்!

புதிய அரசாங்கத்தின்அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதி, பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாசாரம், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம். ஆறுமுகன் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு. தினேஷ் ...

Read More »

தமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது ?

பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதன் மூலம், புதிய கட்­சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பத­வியில் அறி­மு­க­மா­கி­யுள்­ளது. இந்தப் புதிய முக பிர­வே­ச­மா­னது நாட்டைப் புதி­யதோர் அர­சியல் நெறியில் வழி­ந­டத்திச் செல்­வ­தற்கு வழி­வ­குக்­குமா என்­பது பல­ரு­டைய ஆர்­வ­மிக்க கேள்­வி­யாக உள்­ளது. ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள கோத்­த­பாய அர­சியல் பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரல்ல. பாராளு­மன்ற அர­சி­யலில் அனு­ப­வ­மு­டை­ய­வ­ரு­மல்ல. யுத்தச் செயற்­பாட்டுப் பின்­ன­ணியைக் கொண்­டதோர் அதி­கார பல­முள்ள சிவில் அதி­கா­ரி­யா­கவே அவர் பிர­பலம் பெற்­றி­ருந்தார். ஒரு சிப்­பா­யாக இரா­ணு­வத்தில் பிர­வே­சித்து ...

Read More »

செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கும்!

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா எனும் மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது செவ்வாய். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. செவ்வாய் கிரகத்தை பற்றி வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பி கிரகத்தில் உள்ள தட்பவெப்ப நிலை, நீர், வாயுக்கள் மற்றும் புவியியல் பண்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ...

Read More »

புதிய பிராந்திய விசாக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளுக்கு செல்ல விரும்பும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கான ‘Skilled Employer-Sponsored Regional, Skilled Work Regional’  என்னும் இரண்டு புதிய விசாக்களை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய விசாக்கள் 1. பணி வழங்குபவர்கள் மூலம் திறன்வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசா (Skilled Employer-Sponsored Regional) 2. திறன்வாய்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய உள்ளூர் அரசுகள் அல்லது பிராந்திய ஆஸ்திரேலியாவில் பணியாற்ற தகுதியுடைய குடும்ப உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் விசா (Skilled Work Regional) பிராந்திய பகுதிகள் என்றால் என்ன?  ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன் ...

Read More »

ஆறு புதிய ஆளுநர்கள் நியமனம்!

ஆறு புதிய ஆளுநர்கள்   சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு: ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர் சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர் லலித் யு.கமகே – மத்திய மாகாண ஆளுநர் வில்லி கமகே – தென் மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்

Read More »

கார்த்திகைப் பூச்சூடி மரநடுகைமாத மலர்க்கண்காட்சி!

வடக்கு மாகாண சபையின் பிரகடனத்துக்கு அமைவாக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (20.11.2019) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலர்க் கண்காட்சி கார்த்திகைப் பூச்சூடி விருந்தினர்களால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணியின் தலைவர் த.யுகேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம் மலர்க்கண்காட்சித் தொடக்க விழாவில் பிரதம விருந்தினராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா அவர்களும், கௌரவ விருந்தினராகத் ...

Read More »

பத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பு!

சீனாவிலுள்ள அழகு நிலைய உட்கூரையில் 10 ஆண்டுகளாக வசித்து வந்த மலைப்பாம்பு கூரையை பிளந்துக்கொண்டு கீழே விழுந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. சீனாவின்  குவாண்டாங் மாகாணத்தில் உள்ள போசன் நகரில் பிரபலமான அழகு மற்றும் உடல்நல ஆரோக்கிய நிலையம் ஒன்று உள்ளது. குறித்த நிலையத்தின் உட்கூரையின் மீது கடந்த வாரம் ஏதோ சலசலப்பு கேட்டது. சத்தம் அதிகமானதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென கூரை உடைந்த போது, 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கீழே விழுந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! 63 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் டிசெம்பர்  மாதம் 05ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.   இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது டிசெம்பர் மாதம் ...

Read More »

ஓமந்தையில் வெடிபொருட்கள்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் இருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக ஓமந்தை காவல் துறையினர்  தெரிவித்தனர். நேற்றையதினம் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியினை துப்பரவாக்கிய காணியின் உரிமையாளர்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்தனர். குறித்த விடயம் தொடர்பாக ஓமந்தை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காவல் துறை  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதி மன்ற உத்தரவினை பெற்று இன்றையதினம் அவற்றை அகற்றவுள்ளதாக தெரிவித்தனர். குறித்த ...

Read More »