செய்திமுரசு

ஞாயிறு தாக்குதல் சந்தேகநபரொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம்…..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், காலி காவல் துறையால்  கைதுசெய்யப்பட்டு, 90 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நபரொருவர், விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலி காவல் துறையால்  சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக, காவல் துறையினர்  தெரிவிக்கின்றனர். காலி- தனிபொல்கஹா பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் காதர் மொஹமட் ஷஸ்னி என்ற 29 வயதுடைய இச்சந்தேகநபர், சஹ்ரானுடன்  நேர​டித் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் இஸ்லாம் தேசத்துக்காக, வாழ்ககையை தியாகம் செய்வதற்கு, சஹ்ரான் முன்னிலையில் சத்தியபிரமாணம் ...

Read More »

கொரிய எல்லைப்பகுதியில் கிம் ஜாங் அன்- டிரம்ப் சந்திப்பு நடைபெறும்!

கொரியா நாட்டின் எல்லைப் பகுதியில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்கின்றனர் என தென் கொரியா அறிவித்துள்ளது. ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா. உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய ...

Read More »

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதியும் 2014ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாகத் தமது பரம எதிரியாகவும் இருந்தவருமான மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அவர் கூட்டுச் சேர முயற்சிக்கிறார். மறுநாள், அந்த முயற்சிகள் அவ்வாறே இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரத் தயார் எனக் கூறினார். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இப்போது அவர், ...

Read More »

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அமெரிக்காவை தவிர 19 நாடுகள் உறுதி!

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த அமெரிக்காவை தவிர ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றன. குளோபல் வார்மிங் என்றழைக்கப்படும் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார். ...

Read More »

பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்டிருந்த தில்லைநாதன்!

எஸ்.தில்­லை­நா­தனின் மரணம் எம்­மத்­தி­யி­லி­ருந்து பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்ட மூத்த ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை அப­க­ரித்துச் சென்­று­விட்­டது. அரை­நூற்­றாண்­டுக்கும் அதி­க­மான கால­மாக ஊட­கத்­து­றையில் சேவை­யாற்­றிய தில்­லை­நாதன் 1960களின் முற்­கூறில் அச்சு இத­ழி­யலில் பணி­யாற்றத் தொடங்­கி­யி­ருந்­தாலும், பிற்­கா­லத்தில் இலத்­தி­ர­னியல் ஊட­கத்­து­றை­யிலும் தனது முத்­தி­ரையைப் பதித்­தவர். மும்­மொ­ழி­க­ளிலும் வள­மான ஆற்­றலைக் கொண்ட அவர் வீர­கே­ச­ரியில் ஒரு இளை­ஞ­னாக 1960களில் சேர்ந்தபோது இலங்­கையின் தமிழ்ப் பத்­தி­ரிகை உலகில் பழுத்த அனு­ப­வமும், அறி­வாற்­றலும் உடை­ய­வர்­க­ளாக விளங்­கிய கே.வி.எஸ்.வாஸ், எஸ்.டி.சிவ­நா­யகம், கே.சிவப்­பி­ர­காசம் போன்­ற­வர்­களின் வழி­ந­டத்­தலில் பணி­யாற்றும் அதிர்ஷ்­டத்தைக் கொண்­டி­ருந்தார். ஒரு அலு­வ­லகச் செய்­தி­யாளர் என்ற ...

Read More »

ஜனாதிபதியாகும் தகுதி சஜித்துக்கு இல்லை!

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராகக் களமிறங்குவதை அனைவரும் விரும்பலாம். ஆனால் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை. காரணம் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை புலம் பெயர் தமிழர்களின திட்டமிட்ட சதிச் செயல் என்று தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  இவ்விடயம் கோதாபய ...

Read More »

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக ஜுலை 7ல் தீர்மானம் !

பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – தலதா மாளிகை திடலில் பிக்குகள் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்திற்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் முக்கிய விடயமாகமென பொதுபலசேனா தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டிற்கான அஸ்கிரிய , மல்வத்து மற்றும் சியம் ஆகிய முக்கிய மூன்று பௌத்த பீடங்களின் ...

Read More »

பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்!

மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ வென்றுள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக பிரியா கூறுகையில், எனக்கு இது முதல் அழகிப் போட்டி. இதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்குபெற்றது கிடையாது. மாடலிங் செய்ததும் கிடையாது. ...

Read More »

இராணுவ முகாமில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த பெண்!

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் பத்து அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யஸ்மின் சூக்காவை தலைமையாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நட்டஈட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களிற்கு மேலதிகமாக எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக அவர் ...

Read More »

அவுஸ்திரேலியாலில் இருந்து சிறிலங்கா சென்ற தம்பதி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கணவன், மனைவி தம்பதி ஒன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 46 தோட்டாக்களை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான பிடியாணை பிறப்பித்திருந்தது. அத்துடன் கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2018 ...

Read More »