செய்திமுரசு

உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை!

மகசீன் சிறைச்சாலையில்  உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும்  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது. முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 ...

Read More »

நியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் பெயர்கள் பரிந்துரை!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் பெயரை சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது நியூசிலாந்து. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். 84 ரன்கள் சேர்த்து போட்டி ‘டை’யில் முடிய முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின் சூப்பர் ஓவரிலும் இங்கிலாந்து 15 ரன்கள் சேர்க்க முக்கிய காரணமாக இருந்தார். இதனால் பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் ...

Read More »

கடிதத்தை எழுதியவர் கிடைத்து விட்டார்!

அவுஸ்திரேலிய சிறுவன் ஒருவன் மீன் பிடிக்கச் சென்றபோது கிடைத்த பாட்டிலில் இருந்த கடிதத்தின் சொந்தக்காரர் கிடைத்து விட்டார், ஆனால் கடிதம் கிடைத்த விடயம் அவருக்கு தெரியாது! அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Jyah Elliott (13) தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, கடலில் மிதந்து வந்த ஒரு பாட்டிலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதைக் கண்டெடுத்தான். 50 ஆண்டுகளுக்குமுன் Paul Gilmore என்பவர், அப்போது அவருக்கு 13 வயது, அந்தகடிதத்தை எழுதியிருந்தார். அவர் பிரித்தானியாவிலுள்ள Southhamptonஇலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு தனது குடும்பத்துடன் TSS Fairstar என்ற ...

Read More »

உழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர்!

அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார். தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய  ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே  தனது பணியை தொடங்கினார். பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ  மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை ...

Read More »

மட்டு. பல்கலை.யினை ஹிஸ்புல்லாவிடம் கையளிக்க முயற்சித்தால் எதிர்ப்போம் !

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு முரணான நிறுவனமாகும். மீண்டும் இந்த நிறுவனத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு கையளிக்க எவராவது முயற்சிப்பார்களாக இருந்தால் அதனை தான் எதிர்ப்பதாகவும் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார்  பாராளுமன்ற மேற்பார்வைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த பல்கழைலகழகம் தொடர்பாக விளக்கமளித்த  அவர் மேலும் கூறியதாவது ; ...

Read More »

அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கின்றன!

இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், பொதுஐன பெரமுனவாக இருக்கலாம் இவை அனைத்தும் சிங்கள ...

Read More »

அவுஸ்ரேலிய கடலில் மிதந்து வந்த கடிதம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜியா எலியட் என்கிற சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய அப்பா பால் உடன் மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்து வந்துள்ளது. அந்த பாட்டிலுக்குள் ஒரு குறிப்புடன் கூடிய கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதம் பிரித்தானியாவை சேர்ந்த 13 வயது சிறுவனால் 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. மேற்கில் ஃப்ரீமாண்டில் இருந்து கிழக்கில் மெல்போர்ன் வரை தெற்கு அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒரு கப்பல் பயணத்தில் இருந்த 13 வயது சிறுவனின் ...

Read More »

நியூசிலாந்தின் கின்னஸ் சாதனையை முறியடித்த பிரிட்டன் -சாதனை என்ன?

நியூசிலாந்து நாடு பெற்ற உலக கின்னஸ் சாதனையை பிரிட்டன் நாடு முறியடித்துள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. அடுத்தப்படியாக அந்நாட்டிடம், கின்னஸ் சாதனையில் தோற்றுள்ளது. உலகிலேயே மிக செங்குத்தான சாலையாக நியூசிலாந்து நாட்டின் டியூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. கின்னஸ் சான்றிதழின்படி, அந்த சாலை 35% அளவிற்கு செங்குத்தாகவும், இரு புறங்களிலும் வீடுகளும் இருந்தது. இந்த சாதனைக்குப் பின்னர் எவ்வித சாலையும் இடம் பெறவில்லை. ...

Read More »

குல்பூஷனை விடுதலை செய்யும்படி சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை!

குல்பூஷனை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தீர்ப்பை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அத்துடன், இந்தியா சார்பில் குல்பூஷன் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம், உறவினர்களை  பார்க்கலாம் எனவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை இந்தியா வரவேற்றுள்ளது. இந்நிலையில், தீர்ப்பு ...

Read More »

கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா?

திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல! இலங்கையின் பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்படும் கன்னியா வெந்நீரூற்றுத் தலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருப்பதுடன், பட்டினமும் சூழலும் நகர சபையே இதனை  நிர்வகித்தும் வந்தது. இருப்பினும், 2015ஆம் ஆண்டு ...

Read More »