செய்திமுரசு

அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய ஈஸ்டர் தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது!

அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பயன்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுக்கும் கத்தோலிக்க ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கத்தோலிக்க சமூகத்தினரிடையே அரசாங்கம் பொய்யான கூற்றுகளை பரப்புகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பான 22 தொகுதிகளில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த வேண்டும். தாக்குதல்களின் ஆதாரங்களைக் கொண்ட 23 ...

Read More »

மதுபான நிலையங்களைத் திறக்கும் தீர்மானத்தை எடுத்த முட்டாள்கள் யார்?

மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்தது விஞ்ஞானபூர்வமான அமைச்சரவையை நியமிப்பது போன்றது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். சிறந்த அறுவடையை எதிர்பார்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேகரித்து வந்த ஏரியை ஒரே முறையில் திறந்து விட்டு முழு அறுவடையும் நாசமாகியது போன்ற செயலாக இது அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். யார் இந்த முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தது என்பதை அறிய விரும்புவதாகவும் இது போன்ற செயல்களால் தன்னால் பாராளுமன்ற உறுப்பினராக கிராமத்துக்குச் செல்ல இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் ஊடக சந்திப்பில் ...

Read More »

அமைச்சரவையிலிருந்து Christian Porter விலகினார்

ABC ஊடகவியலாளர் Louise Milligan மற்றும் அவர் சார்ந்த ABC நிறுவனத்திற்கு எதிராக மான நட்ட வழக்கு தொடர்வதற்கு நன்கொடையாக பணம் பெற்றதை ஏற்றுக் கொண்ட Christian Porter, அமைச்சரவையிலிருந்து இன்று விலகினார். தொழிற்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராகக் கடமையாற்றிய Christian Porterருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் பிரதமர் Scott Morrison கூறவில்லை. அதே வேளை, இது குறித்து விரிவாக ஆராயும்படி பிரதமர் பணிமனை தலைவர் Phil Gaetjens அவர்களைக் கேட்டுள்ளார். நிதி வழங்கியவர் யார் என்று Christian Porter அடையாளப் படுத்த ...

Read More »

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியானது எப்படி?

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆனால், மரணம் தொடர்பில் காவல் துறை , தற்கொலை எனும் ...

Read More »

அமெரிக்க எல்லையில் தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகள்

அமெரிக்க அரசின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு அகதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துளள்து. ஹைத்தி நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மெக்சிகோவுடன் இணைக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல் ரியோ சர்வதேச பாலத்தின் அடியில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து அவர்கள் தங்கியிருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அவர்கள், அமெரிக்காவுக்குள் செல்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி உள்ளனர். 10 ஆயிரத்தற்கும் ...

Read More »

பொது வெளியில் முரண்பட்டு மக்களை குழப்பாதீர்கள்!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் கருத்துவெளியிடும் உரித்துண்டு. அதனை கட்டுப்படுத்தவும் முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா நெருக்கடியால் ஒன்றுகூடிக் கலந்துரையாட முடியாத நிலைமைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் ...

Read More »

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா?

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச்  சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ...

Read More »

ஜெனிவா:48 சொன்னதும் சொல்லாததும்!

மனித உரிமைப் பேரவையின் இந்த மாத 48வது அமர்வில் 46:1 இலக்கத் தீர்மானத்தின் முடிவுக்கிணங்க ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் முன்வைத்த வாய்மூல அறிக்கையை வழக்கம்போல இலங்கை அரசு நிராகரித்துள்ளது. சீனா அதற்கு பக்கப்பாட்டு வாசித்துள்ளது. கோதபாய அரசு செய்யத் தவறியவைகளையும் செய்ய வேண்டியவைகளையும் ஆணையாளரின் அறிக்கை பட்டியலிட அதில் சொல்லப்படாதவைகளை தமிழர் தரப்பு பட்டியலிடுகிறது. அப்படியானால் 49ம் 51ம் அமர்வுகளுக்கு முற்கூட்டியே அவ்விடயங்களை பேரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கானது. இதனை செய்யத் தவறின் இதற்கும் தனியான பொறுப்புக்கூறல் தீர்மானம் தேவைப்படலாம். ...

Read More »

மக்கள் உண்ணக்கூட முடியாத நிலையில் மதுக்கடையைத் திறக்க யார் தீர்மானித்தது?

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்களின் வரு மானங்கள் அனைத்தும் இழந்துள்ள நேரத்தில் மதுபான விற்பனை நிலையங் களைத் திறப்பதற்கான தீர்மானத்தை யார் எடுத்தது என்று ஐக்கிய தேசிய சுய தொழில் வர்த்தக சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி கேட்டுள்ளது. அரசியல்வாதிகளின் தேவையின் பேரில் மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அதன் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் ஊடக சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

Read More »

லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஆபத்து

உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானம்லொகான் ரத்வத்தை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம்வேண்டுகோள் விடுக்கப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை அச்சுறுத்தினால் மக்கள் நாட்டின் தேர்தல் முறைமீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரம் குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.லொகான் ரத்வத்தை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்து நடந்துகொண்ட விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆராய்ந்துள்ளது. இவ்வாறான ...

Read More »