தாயகவிடுதலைக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 32வது நினைவு நாளையும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாளையும் ஒன்றுகூடி நினைவுகொள்வதற்கான காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து, தேசவிடுதலைக்காக தம்வாழ்வை அர்ப்பணித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் உள்ளங்களில் நினைவில் இருத்தி நினைவுகூருமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம். கொறானா வைரஸ் என்ற தொற்றுநோய் காரணமாக உலகமே மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது. எனினும் போராட்டமே வாழ்வாகவும் வாழ்வே போராட்டமாகவும் கடந்துவந்த எமது மக்களின் இந்த துயரநிலையும் கடந்துசெல்லும் என நம்பிக்கையோடு செயற்படுவோம். இந்தவேளையில் தமிழீழ நாட்டுப்பற்றாளர் ...
Read More »செய்திமுரசு
ATFIA 2020 விருது நிகழ்வு விமர்சனம்
பங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில் பிளாக்டவுனில் அமைந்திருக்கும் “போமன்” மண்டபத்தில் ஆஸ்திரேலிய தமிழ்த்திரை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக ATFIA 2020 விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் திரைத்துறை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக நடந்த முதல் நிகழ்வு இதுதான் எனலாம், ஆகவே இவ்விழாவை நிகழ்த்திய நண்பர் சிட்னி பிரசாத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும். அரங்கை அடைந்து உள்நுழைந்தோம், சிவப்பு கம்பள வரவேற்பு, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளுடன் கலைஞர்களை கேள்விக்கணைகளுடன் வரவேற்றனர் குழுவினர். முடிந்து உள்நுழைந்தோம், மீண்டும் சிவப்பு கம்பளம், எம்மை வெண்ணிறத்தில் ...
Read More »கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் மெல்பேர்னில் தரையிறங்கிய விமானம்!
உருகுவேயிலிருந்து 80 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் புறப்பட்ட விமானம் மெல்பேர்னில் தரையிறங்கியது. உருகுவேயில் தரித்து நின்ற கிரேக் மோர்டைமர் ஆடம்பர கப்பலில் காணப்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம்மெல்பேர்னில் தரையிறங்கியுள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் வைரசினால் பாதிக்கப்பட்ட 80 அவுஸ்திரேலியர்கள் உட்பட 112 அவுஸ்திரேலியர்களும் நியுசிலாந்து பிரஜைகளும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட விமானத்தில் உள்ள பயணிகளை தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பயணிகளிற்கு கப்பலில் இருந்து இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவர்கள் இறங்கி பேருந்துகளில் ஏறுவதை ...
Read More »அவுஸ்திரேலியாவில் கொரோனா பரப்பிய கப்பல்!
கொரோனா வைரஸ் பரவலை சரியாக கையாண்ட அவுஸ்திரேலிய அரசு தன்னுடைய சிறிய தவறினால், இன்று நாட்டில் 600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவ காரணமாகியுள்ளது. தெற்கு சிட்னி நகரில் உள்ள கெம்ப்லா துறைமுகத்தில் மார்ச் மாத துவக்கத்தில் ரூபி பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், பயணம் முடித்து வந்தடைந்தது. அது பின்னர் அடுத்த பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. அந்த கப்பலில், வந்தவர்களில் 158 பேர் உடல்நலம் குன்றி இருப்பதை கண்ட அரசு 9பேருக்கு கொரோனா சோதனை செய்தது. அதில், யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வரவில்லை. ...
Read More »கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபரிடம்
மத்திய மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று (11.04.2020) முதல் உடனடியாக காவல் துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டு, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த காவல் துறை பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது குறித்து காவல் துறை தலைமையகம் இன்று விஷேட ; அறிவிப்பை விடுத்ததுடன், சிரேஷ்ட பிரதிப் காவல் துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ கொரோனா ஒழிப்பு தொடர்பிலானகாவல் துறை மா அதிபரின் நடவடிக்கைகளுக்கு உதவியாகவும், ; கீழ் மட்ட நிலையில் இருந்து ...
Read More »’கொரோனா தடுப்பூசிக்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டும்
கொரோனா வைரஸூக்கான தடுப்பூசியை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் தயாரிக்க முடியுமென, பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியை சாரா கில்பர்ட், இதற்கான பரிசோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது குறித்த தடுப்பூசியை அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்கு முதன் முதலில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Read More »ஒய்வு இல்லாமல் சவப்பெட்டிகள் தயாரிப்பு- பிரான்சில் வேதனை!
கரோனா வைரஸின் கோரத்தாண்டவம் ஐரோப்பிய நாடுகளை விழிபிதுங்கச் செய்யும் நிலையில் மரண விகித அதிகரிப்பால் சவப்பெட்டி தொழில்கள் கால நேரம் பாராது ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் சவப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஐரோபாவின் மிகப்பெரிய சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமான கிழக்கு பிரான்சில் உள்ள ஓஜிஎஃப் நிறுவனத்தில் பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி சவப்பெட்டியை தயாரித்து வருகின்றனர். நோய் தொற்று காரணமாக மொத்தம் 4 மாடல்களில் மட்டுமே சவப்பெட்டியை உருவாக்குவதாக தொழிற்சாலை இயக்குநர் இமானுயெல் காரெட் தெரிவித்தார், பொதுவாக 15 வகையான சவப்பெட்டிகள் உள்ளன என்கிறார் ...
Read More »கொரோனாவின் தாக்கத்திற்கு பின் இலங்கை எப்படியிருக்கும்?
இலங்கையானது கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்டாலும் அதன் பின்னர் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முங்கொடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்று பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும் உள்நாட்டு உற்பத்திகளை தவிர்த்து வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தமையால் அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படப்போகும் மோசனமான நிலைமைகளை தவிர்க்கவே முடியாதென்றும் அவர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு உலகுமே கொரோனா தொற்றுக்குக்கு இலக்காகி நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை அனைத்து நாடுகளுமே சந்திக்கவுள்ளதாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் ...
Read More »கொவிட் -19 கொரோனா வைரஸின் தாக்கமும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணமும்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாக அனைவரும் நெருக்கடிகளை சந்திக்கும் இந்நேரத்தில் கொரோன வைரஸில் இருந்து விடுபடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும் விதத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்துகொண்ட விவாதம் வியாழக்கிழமை “மந்திரி.எல்கே” வின் முகப்புத்தக பக்கத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அரசாங்கம் அவசியமில்லை இராணுவம் போதும் என்ற கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியாது – முன்னாள் பாராளுமன்ற ...
Read More »சீன தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை- அமெரிக்கா எச்சரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது. சீனாவின் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சீனா டெலிகாம்’ அமெரிக்காவிலும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘சீனா டெலிகாம்’, ‘சீனா யூனிகாம்’ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து இது பற்றி ஆராய்வதற்காக தொலைத்தொடர்பு ஆணையம், பாதுகாப்பு, வெளியுறவு, ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			