செய்திமுரசு

ரொகிங்யா அகதி சிறுவர்களின் கல்விக்கான உரிமையை மறுக்கின்றது பங்களாதேஸ்!

பங்களாதேசின் அகதிமுகாம்களில் உள்ள மியன்மாரின் ரொகிங்யா இன சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கான உரிமை மறுக்கப்படுவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அகதி சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கு உள்ள உரிமையை பங்களாதேஸ் அதிகாரிகள் வேண்டுமென்றே மறுக்கின்றனர் என  சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?என்ற கேள்வியுடன் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விகற்கும் வயதிலுள்ள சுமார் 40,000 சிறுவர்களிற்கான உரிமை மறுக்கப்படுவது குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. உரிய கல்வியில்லாத நிலையில் இந்த சிறுவர்கள் இளைஞர் யுவதிகள் துஸ்பிரயோகங்கள் குற்றங்கள் வறுமை ...

Read More »

கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே ...

Read More »

விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல!-சுவிட்சர்லாந்து நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம்  குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே ...

Read More »

மீண்டும் கைக்கு வருமா அம்பாந்தோட்டை?

கடந்த வியா­ழக்­கி­ழமை, தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை புது­டெல்­லிக்கு மேற்­கொள்­வ­தற்கு முன்னர், தனது முத­லா­வது வெளி­நாட்டு ஊடகச் செவ்­வி­யையும், இந்­திய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கே கொடுத்­தி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ. இந்­தி­யாவின் பாது­காப்­புத்­துறை ஆய்­வாளர் மற்றும் ஊட­க­வி­ய­லா­ள­ரான நிதின் ஏ கோகலே, Bharat Shakti.in மற்றும் SNI ஆகி­ய­வற்றின் தலைமை ஆசி­ரி­ய­ரா­கவும் இருக்­கிறார். அவ­ருக்கே கோத்­தா­பய ராஜ பக் ஷ தனது முத­லா­வது தனிப்­பட்ட செவ்­வியை வழங்­கி­யி­ருந்தார். இந்தச் செவ்வி வெளி­யா­கிய பின்னர் தான், அவ­ரது புது­டெல்லி பயணம் இடம்­பெற்­றது. எனவே, புது­டெல்­லியை சங்­க­டப்­ப­டுத்தக் கூடிய, ...

Read More »

மாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை!

அழுத்­தங்கள், கெடு­பி­டிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்­வுகள், பெரும்­பாலும் தடை­யின்றி நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.   ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், கேள்­விக்­கு­றி­யாக இருந்த பல  விட­யங்­களில், மாவீரர் நாள் நிகழ்­வு­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டுமா என்­பதும், ஒன்று. 2009இல் போரை முடி­வுக்குக் கொண்டு வந்து – விடு­தலைப் புலி­களை அழித்து விட்­ட­தாகப் பிர­க­டனம் செய்­த­வர்கள், அதில் நேர­டி­யாகப் பங்­க­ளித்­த­வர்கள் அனை­வரும் இப்­போது நாட்டின் மிக­முக்­கிய பதவிப் பொறுப்­பு­களில் இருக்­கி­றார்கள். அப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இப்­போது பிர­த­ம­ராக இருக்­கிறார். அப்­போது பாது­காப்புச் ...

Read More »

ஆஸி.யை டெஸ்ட் போட்டியில் தோற்கடிக்க ஒரு அணிதான் இருக்கு: புதிர் போட்ட மைக்கேல் வான்

ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு ஒரு அணிதான் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியஅணி. ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் ...

Read More »

நடேசலிங்கம் – பிரியா தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் எழுத்து பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை!

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் புகலிடம் கோரும் ஈழ தமிழ் குடும்பத்தை தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் ஒருபோதும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நடேசலிங்கம் – பிரியா முருகப்பன் தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்கள் கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் கடலோர தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர். ஆகஸ்டில் மாற்றப்படுவதற்கு முன்னர், குடும்பம் மெல்போர்னில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் ...

Read More »

ஈரான் மிரட்டல்: டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை!

ஈரான் நாட்டின் மிரட்டல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் கலந்தாலோசித்தனர். ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்கா நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை விரைவு படுத்தியது. சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ...

Read More »

சிதைவுறும் நம்­பிக்­கைகள்!

ஆட்சி மாற்றம் என்­பது பக்­கச்­சார்­பின்றி நேர்­மை­யாக செயற்­படும் அதி­கா­ரி­க­ளுக்கும், பக்கம் சார்ந்து செயற்­படும் அதி­கா­ரி­க­ளுக்கும் சிக்­க­லா­ன­தா­கவே அமைந்து விடு­வது வழக்கம். ஆட்­சி­மாறும் போது, சந்­தர்ப்­பத்­துக்­கேற்ப மாறி விடும் அதி­கா­ரிகள் தப்பிக் கொள்­வார்கள். ஏதோ ஒரு பக்கம் சார்ந்து செயற்­படும் அதி­கா­ரிகள், அடுத்த முறை வரட்டும் என்று பதுங்கிக் கொள்­வார்கள். நேர்­மை­யாக செயற்­படும் அதி­கா­ரிகள் பந்­தா­டப்­ப­டு­வார்கள். அவர்­க­ளுக்கு எந்த ஆட்சி வந்­தாலும், சிக்­க­லா­கவே இருக்கும். ஜனா­தி­பதித் தேர்­தலை அடுத்து ஏற்­பட்ட ஆட்சி மாற்றம், அதி­கா­ரிகள் பல­ருக்கு இட­மாற்­றத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது. பல­ருக்கு நல்ல பத­விகள் கிட்­டி­ யி­ருக்­கின்­றன. ...

Read More »

கடத்தப்பட்ட விவகாரம்: தீவிரமாக கவனம்!-அரசாங்கம் அறிவிப்பு!

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் சிறிலங்கா ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய நவம்பர் 25 ஆம் திகதி இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதித் தலைவர் ஆகியோரை சந்தித்து, காவல் துறை  திணைக்களத்தின் குற்றப் ...

Read More »