செய்திமுரசு

விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு

மன்னார், பேசாலை காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை காவல் துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (11) மாலை மீட்டுள்ளன. பேசாலை காவல் துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை பதில் காவல் துறை பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்ப பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் சந்தேகப் பொருட்கள் தொடர்பாக ...

Read More »

ஆஸ்திரேலிய அகதிகள் மீள்குடியேற்றத்திற்காக அமெரிக்காவுக்கு பயணம்

நவுரு மற்றும் மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த 28 மாகயுள்ளனர். நவுருத்தீவிலிருந்து வெளியேறும் 24 அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவின் சிக்காகோ மற்றும் பிலடெல்பியா நகரங்களில் வாழ இருக்கின்றனர். இன்றைய நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட அகதிகள் நவுருத்தீவிலும் 180க்கும் மேற்பட்ட அகதிகள் பப்பு நியூ கினியா தீவிலும், 200க்கும் மேற்பட்ட அகதிகள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் தடுப்பிலும் மாற்று தடுப்பு இடமாக செயல்படும் ஹோட்டல்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ...

Read More »

ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்;பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தனர் ...

Read More »

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 26,532 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களை விட வெளிநாட்டு தொழிலாளர்களே கொரோனாவால் அதிகம் ...

Read More »

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தினை பயன்படுத்த அமைச்சரவை அனுமதி

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிச கட்சியினருடன் மோதலில் ஈடுபட்ட காவல் துறையை  தனிமைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை  மேற்கொண்ட தாக்குதல் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான காவல் துறை  தாக்குதலை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களை தடை செய்யும் உத்தரவை நடைமுறைப்படுத்தமுயன்றவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறை  மீது தாக்குதலை நடத்தியதை தொடர்ந்தே ...

Read More »

அனலைதீவு கடற்படையினரின் முழுமையான முற்றுக்கைக்குள்…..

யாழ்ப்பாணம், அனலைதீவுப் பகுதி நேற்று முன்தினம் காலை முதல் கடற்படையினரின் முழுமையான முற்றுக்கைக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியேறவோ, கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவோ கடற்படையினர் அனுமதிக்க மறுத்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். கடற்படையினர் இருவர் மீது மூவர் அடங்கிய குழுவொன்று தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களைத் தேடியே அனலைதீவு முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குழுவொன்றால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து கடற்படையினர் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அனலைதீவில் திங்கட்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த இரு ...

Read More »

கொழும்பில் சிறிலங்கா காவல் துறையால் தூக்கி வீசப்பட்ட யுவதி!

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் ; கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் சிறிலங்கா காவல் துறை தலையீட்டினால் கலைக்கப்பட்ட போது, ; கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் அருகே காவல் துறை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும் ; யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகு வலி காரணமாக அவர் இன்று காலி – கராப்பிட்டிய போதனா அவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் போது இந்த யுவதியின் கைகள், கால்களை காவல் துறை  பிடித்து ...

Read More »

நாகவிகாரை மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் நாகவிகாரை மீது இனந்தெரியாத நபர்கள், இன்று (10) அதிகாலை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவகத்தையடுத்து, நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல், மோடடார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக காவல் துறையினர் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More »

சுயாதீனமான தேர்தலுக்கு அரசாங்கமே இடையூறு !

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கம் முயற்சித்த போதிலும் அவற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் நலன் கருதி சுயாதீனமாகச் செயற்பட்டமையின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கமே இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ;நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கேள்வி- தேர்தல்கள் ...

Read More »

ஜீவனின் பெயரே இல்லை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவால் நேற்று (9) வெளியிடப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ், முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்படாத நிலையிலும் விருப்பிலக்கம் வெளிவராத நிலையிலும், ஆறுமுகன் தொண்டமான், மே மாதம் 26ஆம் திகதியன்று திடீரென மரணமடைந்தார். அவருடைய ...

Read More »