அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் புதிய தடை!

lightweight, single-use- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை நடைமுறைக்கு வருகிறது. விக்டோரியா மாநிலத்தில் இந்த தடை நவம்பர் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் , துரித உணவு விற்பனை நிலையங்கள், மற்றும் எரிபொருள் சேவை நிலையங்கள் ஆகியவற்றில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பாவனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது. ஆனால் பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பாவிக்க தடை இல்லை. பிளாஸ்டிக் மாசுபாட்டினை குறைப்பதற்கு பல வழிகளில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதலாவது கருணைக்கொலைக்கு விண்ணப்பித்த தாயார்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை குறித்த சட்டம் நடப்புக்கு வந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் கருணைக் கொலை தடைசெய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு அதனை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்களை விக்டோரியா மாநிலம் அறிமுகப்படுத்தியது. அது துணிச்சலான மாற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது. கருணைக் கொலைக்கு அனுமதி பெற வேண்டுமெனில், கடும் நோய் கொண்ட மூத்தோராகவோ, உயிர் வாழும் காலம் ஆறு மாதத்துக்கும் குறைவாகவோ இருக்கவேண்டும் போன்ற சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். சில பாதுகாப்பு நடைமுறைகளும் அதற்காகச் செயல்படுத்தப்படவுள்ளன. தன்னிச்சை மறுஆய்வுக் குழுவினர், மரண விசாரணை நீதிபதி ஆகியோர் ...

Read More »

அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி தற்கொலைக்கு முயற்சி!

மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின்  லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என  மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான  சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார் குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார். இன்று அவர் மருத்துவகிசிச்சை ...

Read More »

விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படுவோர், தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரினால், மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கப்படும். இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் ...

Read More »

உயிரணு தானம் செய்தவர் தான் குழந்தையின் சட்டப்பூர்வ தந்தை!- ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம்

உயிரணு தானம் செய்தவர் தான் குழந்தையின் சட்டப்பூர்வ தந்தை என ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்வதற்காக 2006-ம் ஆண்டு உயிரணுக்கள் தானம் செய்துள்ளார். இதன்மூலம், பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையிலான நட்பு முறிந்தது. எனினும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில், அந்த ஆணின் பெயர் ‘பெற்றோர்’ என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அந்த குழந்தையும் அவரை ‘டாடி’ என்றே அழைத்துள்ளது. இந்நிலையில், அவருடனான ...

Read More »

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் -பிரமிப்பூட்டும் காட்சி

ஆஸ்திரேலியாவில் கடல் அலையைப் போல மோதிய மேகக்கூட்டத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் கடந்த 11ம் தேதி பவுல் மெக்கல்லி என்பவர் வரப்பு அருகே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவர் சற்று வானை பார்த்தார். அப்போது திடீரென ஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி தென்பட்டுள்ளது. காரில் இருந்தபடியே இதனை புகைப்படம் எடுத்துள்ளார். வானில் மேகங்கள் தண்ணீரைப் போல காட்சி அளித்துள்ளது. இது குறித்து பவுல் கூறுகையில், ‘கடல் அலைகள் வேறு கோணத்தில் வானில் ...

Read More »

பால் மா கலப்படம்: அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட சில பால் வகைகளில் சுத்திகரிப்பு திரவம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் 8 வகையான பால் வகைகள் திரும்பப்பெறப்படுவதாகவும் பால் கொள்முதல் செய்யும்போது கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள Coles, Woolworths, IGA உள்ளிட்ட பிரபல அங்காடிகள் மற்றும் எனைய இடங்களில் விற்பனையாகும் பால் வகைகள் தொடர்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு திரவம் கலந்துள்ளதாக நம்பப்படும் இந்தப்பால் மஞ்சள் நிறமாக தெரியும் அல்லது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நோய்!

இளம்பெண் ஒருவர் தமது நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்க்கு இரையாகியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதால் அவரது கட்டைவிரல் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் கர்ட்னி வித்தோர்ன் என்பவர் பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான பின்னர் நகம் கடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த பழக்கம் ஒருகட்டத்தில் இவரது கட்டைவிரலில் உள்ள நகம் மொத்தமும் கடித்தே துப்பியுள்ளார். இந்த நிலையில் தமது கட்டைவிரல் கருமையாக ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி செய்த மோசடி! -அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து!

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி ஒருவர் தனது சொந்தநாட்டில் திருட்டுத்தனமாகப்பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் – அடையாள மோசடி புரிந்தார் என்ற குற்றத்தின் பேரில் – அவரது அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 26 வயது ஆப்கான் அகதியொருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நபர் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அதே ஆண்டில் தற்காலிக வதிவிட விசா கிடைத்தது. ...

Read More »

ஆஸ்திரேலியா பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு!

விளம்பர தூதராக இருக்க ஒப்பந்தம் செய்த தொகையை கொடுக்க தவறியதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள ‘ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ்’ எனும் கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கிரிக்கெட் பேட்களில் சச்சின் தெண்டுல்கரின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி விளம்பரம் செய்து அவர்களது தயாரிப்புகளை ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ என விற்பனை செய்வதற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் தருவதாக கடந்த ...

Read More »