அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலிய வீராங்கனை மகளிர் இருபதுக்கு – 20 போட்டியில் புதிய உலக சாதனை!

மகளிர் இருபதுக்கு – 20 போட்டியில் புதிய உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அலீசா ஹீலி என்ற வீராங்கனையே இவ்வாறு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு – 20 போட்டியிலேயே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப் போட்டியில், அவுஸ்திரேலிய வீராங்கனையான அலீசா ஹீலி 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைக் குவித்து மகளிர் சர்வதேச இருபதுக்கு – ...

Read More »

மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் பலி!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   அவுஸ்திரேலியாவின் எம்பன்டன் பார்க் (Hampton Park) மேல் நிலை கல்லூரியில் கல்வி பயிலும் ரொரென்சோ ஜூரியன்ஸ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேல்போர்ன் நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாலையில் ரொரென்சோ ஜூரியன்ஸ் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் படுகாயமடைந்த ரொரென்சோ ஜூரியன்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந் ...

Read More »

அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை : நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் !

கடந்த ஆகஸ்ட் 01 முதல் 31 வரை அவுஸ்திரேலியா மேற்கொண்ட எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்டுள்ள மாதந்திர செய்திக்குறிப்பில், பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், இலங்கையிலிருந்து 13 பேருடன் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்கள் யாருக்கும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது ஆஸி. எல்லைப்படை. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இவர்கள் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதே சமயம், அவுஸ்திரேலிய செல்ல ...

Read More »

நடுவீதியில் காரிலிருந்து விழுந்து கர்ப்பிணிபெண் மரணம்- அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மேல்பேர்னின் வடமேற்கு பகுதியில் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் காரிலிருந்து விழுந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஆரம்பித்த சம்பவம் வீதியில் முடிவடைந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 32 வயது கர்ப்பிணியை குறிப்பிட்ட வீட்டில் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளார் பின்னர் காரிலும் அச்சுறுத்தியுள்ளார் அதன் போது குறிப்பிட்ட பெண் தவறி விழுந்ததில் பலத்த காயங்களிற்கு உள்ளானார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நிலையில் ஹெலிக்கொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் அங்கு உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை சிசேரியன் மூலம் ...

Read More »

கிறிஸ்துமஸ் தீவில் இருப்பது சித்திரவதை!

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ்க் குடும்பம் தொடர்பான வழக்கை முழுமையாக விசாரிக்க, அண்மையில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இதனால், வழக்கு முடியும் வரை அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் வைத்திருக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், இத்தீவில் இருப்பது மனரீதியான துன்புறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ள பிரியா- நடேசலிங்கம் இணையர், அவர்களது குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக வேதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் ...

Read More »

லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம்!

பிரித்தானிய விமானப் பொறியியலாளர்களினால் உருவாக்கப்படுகின்ற புதிய hypersonic-விமான இயந்திர தொழில்நுட்பத்தின் உதவியுடன் லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நான்கரை மணி நேரத்தில் பயணிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Synergetic Air Breathing Rocket Engine என்ற இந்தப்புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய அதிவேக பறப்பு இயந்திரத்தினை விமானங்களில் பொருத்துவதன் மூலம் பாரம்பரிய பறப்பு இயந்திரங்களைவிட பலமடங்கு வேகத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Reaction Engines நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

Read More »

சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்!

சிட்னி விமான நிலையத்திற்குள் பயங்கரவாத சகோதரர்கள் அமைதியான முறையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தவிருந்த காணொளி  காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஹ்மூத் (31) மற்றும் கலீத் கயாத் (51) சகோதரர்கள் கடந்த 2017ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பரபரப்பான விமான நிலையத்திற்கு வெளியே தங்களுடைய சாமான்களுடன் சேர்த்து வெடிகுண்டுகளை சுமந்து சென்றுள்ளனர். காவல் துறை  வெளியிட்டுள்ள அந்த காணொளி காட்சியில், சோதனை செய்யும் இடத்தை நெருங்கிய போது, எடை அதிகம் இருப்பதாக மஹ்மூத் கூறியுள்ளார். உடனே இருவரும் மிகப்பெரிய ...

Read More »

பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. லிசா மற்றும் ஜெசிகா ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி பாப் பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா ...

Read More »

ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்த தந்தையின் டைரி குறிப்பு!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த மாரா (41) என்கிற பெண் கடந்த 2013ம் ஆண்டு வயதில் தன்னைவிட சிறியவரான அந்தோணி (25) என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார். கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த மாராவிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் மூன்று வயதில் சார்லோட் என்கிற பெண் குழந்தை இருந்தது. அதனை தொடர்ந்து, ஆலிஸ் மற்றும் பீட்ரிக்ஸ் என்ற இரண்டு வயது இரட்டையர்களை பெற்றெடுத்தனர். சொந்தமாக நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் இரவு நேர வேலை செய்து வந்தார். 3 ...

Read More »

யாசிதி அகதிகள் : அவுஸ்திரேலியாவில் அவர்களது நிலை என்ன?

2014ம் ஆண்டு ஐ.எஸ் எனப்படும் கொடூர மதத்தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். மேற்கு ஈராக்கின் சின்ஜர் மலைப்பகுதியிலிருந்து  வெளியேறிய இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை அவுஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். ஈராக்கின் சின்ஜர் மலையிலிருந்து வெளியேறிய லைலா தனது அனுபவத்தை பகிரும் போது, “ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஏராளமான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் வந்த பிறகு, நாங்கள் மலைக்கு சென்றோம். குடும்பத்துடன் மலையில் வசித்த நாங்கள் உணவின்றி தண்ணீரின்றி இருந்தோம். ஐந்து நாட்கள் நடந்தே சென்ற நிலையில் குர்தீஸ்தானை ...

Read More »