அவுஸ்திரேலியமுரசு

ஆஸி.யை டெஸ்ட் போட்டியில் தோற்கடிக்க ஒரு அணிதான் இருக்கு: புதிர் போட்ட மைக்கேல் வான்

ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு ஒரு அணிதான் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியஅணி. ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் ...

Read More »

நடேசலிங்கம் – பிரியா தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் எழுத்து பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை!

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் புகலிடம் கோரும் ஈழ தமிழ் குடும்பத்தை தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் ஒருபோதும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நடேசலிங்கம் – பிரியா முருகப்பன் தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்கள் கோபிகா (4) மற்றும் தருணிகா (2) ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் கடலோர தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர். ஆகஸ்டில் மாற்றப்படுவதற்கு முன்னர், குடும்பம் மெல்போர்னில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் ...

Read More »

அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு முட்டுக்கட்டை!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அவர்களை ஆஸ்திரேலிய அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது மருத்துவ வெளியேற்றச் சட்டம். இவ்வாறான தடுப்பு முகாம்கள் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம், இச்சட்டம் ஆளும் லிபரல் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இச்சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்து வருகிறது ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசாங்கம். இந்த சூழலில், நவுருவில் உள்ள அகதிகள் நாட்டிற்கு வெளியே ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த மலைப்பாம்பு!

ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.ஆஸ்திரேலியாவில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் மலைப்பாம்பு ஒன்று ஒய்யாரமாக படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள லிஸ்மோர் நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமை இளம்பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நுழைந்த அவர் ஒரு நிமிடம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்கவுள்ளார்!

குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ...

Read More »

புலம்பெயர்ந்த பெண்! இன்று அவுஸ்திரேலியாவில் முக்கிய பிரபலம்!

அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதன்மை செயல் அலுவலர் ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து 200 டொலர்களுடன் புலம்பெயர்ந்த ஒரு இளம்பெண் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், Macquarie குழுமத்தின் முதன்மை செயல் அலுவலரான Shemara Wikramanayake (57), அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதல் பெண் முதன்மை செயல் அலுவலர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அவர் 2018/19 நிதியாண்டில் 18 மில்லியன் டொலர்கள் ஊதியம் பெற்றுள்ளார். வசதியாக வாழ்ந்த சூழலில், ஒரு நாள் 200 டொலர்களுடன் நாட்டை விட்டு புறப்பட ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அச்சமூட்டும் சம்பவம்!

சிட்னியின் உணவுவிடுதியொன்றில்  முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்ணை இனரீதியில் நபர்ஒருவர் மோசமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 38 வார கர்ப்பிணியான 31 ரசா எலஸ்மெர் என்ற முஸ்லீம பெண் பரமெட்டா கபேயில் தனது நண்பிகளுடன் காணப்பட்டவேளை 43 வயது நபர் ஒருவர்அவரை தாக்கினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ருசாஎலெஸ்மருடனும்  அவரது நண்பிகளுடனும் உரையாடிய பின்னர் அந்த நபர் தாக்குதலில் ஈடுபடுவதை சிசிரிவி காட்சிகள் காண்பித்துள்ளன. அந்த நபர் எலஸ்மெரின் முகத்தில் ஓங்கிகுத்துவதையும் அவர் நிலை தடுமாறி கீழே விழுவதையும் அதன் பின்னர்அந்த நபர் காலால் ...

Read More »

ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவிப்பு!

பிரிஸ்பேன் டெஸ்டில் டேவிட் வார்னர் 151 ரன்களும், ஜோ பேர்ன்ஸ் 97 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் தொடக்க ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது. அந்த அணி 86.2 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் ...

Read More »

புதிய பிராந்திய விசாக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளுக்கு செல்ல விரும்பும் திறன்வாய்ந்த வெளிநாட்டினருக்கான ‘Skilled Employer-Sponsored Regional, Skilled Work Regional’  என்னும் இரண்டு புதிய விசாக்களை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதிய விசாக்கள் 1. பணி வழங்குபவர்கள் மூலம் திறன்வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசா (Skilled Employer-Sponsored Regional) 2. திறன்வாய்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய உள்ளூர் அரசுகள் அல்லது பிராந்திய ஆஸ்திரேலியாவில் பணியாற்ற தகுதியுடைய குடும்ப உறுப்பினர் பரிந்துரை அடிப்படையில் விசா (Skilled Work Regional) பிராந்திய பகுதிகள் என்றால் என்ன?  ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேர்ன், பிரிஸ்பேன் ...

Read More »

பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும்!

அண்மையில், பப்பு நியூ கினியாவில் ஆஸ்திரேலியாவின் நித உதவியுடன் உருவாக்கப்பட்ட Bomana குடிவரவுத்தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 50 தஞ்சக்கோரிக்கையாளர்கள், தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டிருந்தால் மேலும் பல தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார் குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து சமீபத்தில் வெளியேறிய இவர், கடந்த 6 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு சென்றடைந்திருக்கிறார். “தஞ்சக்கோரிக்கையாளர்கள் கடுமையான அழுத்தத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பப்பு நியூ கினியாவில் தஞ்சம் கோர மறுப்பதால் அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். ...

Read More »