அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள்

அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று பெரும் சுகாதார சிக்கலாகவும் அதன் தொடர்ச்சியாக பயணத் தடைகளும் நடைமுறையில் உள்ள இச்சூழலில், மனுஸ்தீவில் (பப்பு நியூ கினியா) வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 35 பேர் அமெரிக்காவுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட 7 அகதிகளும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் தற்போது அமெரிக்காவுக்கு 42 அகதிகள் பயணமாகியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ...

Read More »

கோத்தா தனி சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்பாட்டார்!

சிறிலங்கா  ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்தாக அமையும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றிக்காகத்தான் இத்தகைய கருத்தைத் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது தனி சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்பாட்டார். பௌத்த சிங்கள இனவாதத்தையே கக்கினார். அத்தகைய வாக்குகளைப் பெற்றே வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது அதற்கு தீர்வு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக போராட்டம்!

கொரோனா பதற்றத்திற்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி அந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டம் நடைபெற்றுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்த இப்போராட்டத்தில் 120 பேருக்கு மேல் பங்கேற்றுள்ளனர். மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 70 அகதிகள் இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டலை தடுப்பிற்கான மாற்று இடமாக ஆஸ்திரேலிய அரசு பயன்படுத்தி வரும் நிலையில், போதுமான மருத்துவ சிகிச்சையும் அகதிகளுக்கு வழங்கப்படவில்லை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் எப்படியானவர்கள் நுழைய முடியும்?

கொரோனா எதிரொலி காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால், ஆஸ்திரேலியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்கள் மட்டுமின்றி பயணத்தடையினால் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணத்தடையால், தற்காலிக விசா பெற்ற பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்பான்சர் பணி விசாக்கள் மூலம் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு Fletcher என்பவரின் குடும்பம் சென்ற நிலையில், பள்ளித் தேர்வுகளை முடிப்பதற்காக அவரது 16வயது மூத்த மகன் டெயிலர் இங்கிலாந்திலேயே தங்கியிருந்திருக்கிறார். பின்னர், ஆஸ்திரேலியாவில் உள்ள பெற்றோருடன் ...

Read More »

11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிப்பு

அர்ஜென்டினாவின் தெற்கு பகுதியில் உள்ள சாண்டாகுரூஸ் மாகாணத்தில் 7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புகூடை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசரின் எலும்புகூடு கண்டறியப்பட்டுள்ளது. மெல்போர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெசிகா பார்கரால் என்ற தன்னார்வலர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘எல்பிரோசார் எனப்படும் அந்த டைனோசரின் பெயருக்கு லேசான பாதம் கொண்ட பல்லி என்று பொருள். அந்த படிமத்தை ஆராய்ந்தபோது ...

Read More »

எல்லைப்படையினர் அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களுக்குள்  எல்லைப்படையின் அதிகாரத்தை  அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. தடுப்பு முகாம்களில் சோதனைகளை மேற்கொள்ளவும் கைப்பற்றப்படும்  பொருட்களை பறிமுதல் செய்யவும் இந்த மசோதாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த அதிகாரம் காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள வெளிநாட்டு குற்றவாளிகளை சமாளிக்கும் விதமாக இத்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டட்ஜ் தெரிவித்துள்ளார். “இவ்வாறான வெளிநாட்டினர் குழந்தைகளை பாலியல் துஷ்பிரோயகம் செய்தவர்களாகவும் வன்முறை, போதை மருந்து பயன்பாடு கொண்டவர்களாகவும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கின்றனர்,” என அவர் ...

Read More »

இணைய வழியாக ஒன்றுகூடி இதய அஞ்சலியை செலுத்துவோம்!

அன்பான அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளே! நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம். தற்போதைய கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர முடியாத காலச்சூழல் உள்ள நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீட்டிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம். இணைய வழியாக ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். காலம்: 18 – 05 – 2020 Monday 7pm – 8pm (AEST), ...

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள 150 நியூசிலாந்தினரை விடுவியுங்கள்?

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்துமிகுந்த இடமாக மாறக்கூடும் என்பதால், தடுப்பில் உள்ள 150 நியூசிலாந்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிட்னி தடுப்பு முகாமிலிருந்து வெளியாகிய படங்கள், அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கான முடியாத சூழல் நிலவுவதை உணர்த்தியிருக்கின்றன. அம்முகாமில் உள்ள ஒரு நபர், தான் வைக்கப்பட்டுள்ள 120 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சூழல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தடுப்பில் உள்ளவர்கள் உயிர்களுக்கு ஆபத்து உள்ளதாக மருத்துவர்களும் மனித ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 6 இலட்சம் பேர் தொழில்களை இழந்தனர்!

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவில் சுமார் 600,000 பேர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளதாக அந் நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் வீதமானது குறைந்து வருகின்ற போதிலும், நாடு மேலும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கக்கூடும் என்றும் அவர் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் 6,989 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 98 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 6,301 பேர் குணமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Read More »

மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலியா நிறுவனம்

கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆஸ்திரேலியா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதற்காக மன்னிப்பு கேட்டதால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2016-ம் ஆண்டு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்டனின் பொருட்கள் மற்றும் வீரர்கள் அணியும் ஆடைகளை பிரபலப்படுத்தும் உலகளாவிய பிரத்தியேக ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 2018 செப்டம்பர் மாதம் 17-ந்தேதிக்குப் பிறகு சச்சின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். இருந்தாலும் சச்சின் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் கூறியபடி ராயல்டி மற்றும் ஒப்புதல் கட்டணத்தை ...

Read More »