அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியா e-கல்வி அறக்கட்டளை ஆசிரியர் பற்றாக்குறை நீக்க உதவி!

இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு நிகர்நிலை ஆசிரியர்களை (online Teachers) வழங்குவதன் மூலம் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டம் ஒன்றை அவுஸ்திரேலியாவிலிருந்து செயற்படும் e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) அமைப்பு முன்னெடுத்திருக்கின்றது. ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள இவ்வாறான பாடசாலைகளுக்கு Zoom செயலி மூலமும் மற்றும் இணைய வழிகளின் மூலமும் கற்பிக்கும் திட்டமொன்றையே e-கல்வி அறக்கட்டளை (JUGA-Victoria) ஆரம்பித்துள்ளது. முக்கியமாக, ஆசிரியர்கள் தட்டுப்பாடான உயர்தர பாடங்களான பெளதிகவியல், இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் ஆகியவற்றுக்கும், வகுப்பு 6-11 வரையான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ...

Read More »

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள்: வார்னர் சொல்கிறார்

டி20 உலக கோப்பை ரத்து செய்யப்பட்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வாய்ப்பில்லை என்றால் அந்த காலக்கட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) அதற்கு பதிலாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் நிச்சயம் எங்களால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியும். 20 ஓவர் உலக ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து பல போராட்டங்கள்!

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகளை விடுவிக்கக்கோரி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கங்காரு பாய்ண்ட் ஹோட்டல் நோக்கி ஊர்வலம் செல்வதற்கு முன்பாக 1000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடியதால் பிரிஸ்பேன் நகரின் முக்கிய சாலை முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தடுப்பிற்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக கேபாராடிய கவுன்சிலர் கைது!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் Kangaroo Point ஹோட்டலில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சி கவுன்சிலர் Jonathan Sri கைது செய்யப்பட்டுள்ளார். குவின்ஸ்லாந்த் காவல்துறையினர் தன்னை கைது செய்ததில் அரசியல் தலையீடுகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நூற்றுக்கணக்கான மக்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், என்மீது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,” என Jonathan Sri குறிப்பிட்டுள்ளார். “நிலைமையை தணிக்க முயலாமல் படைப்பலத்தை மேலும் நிலைமை மோசமடையும் விதத்தில் காவல்துறையினர் பயன்படுத்தினர்,” என அவர் கூறியுள்ளார். கங்காரு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பெற்றோரின் சடலங்களை நடுக்கடலில் கைவிட்டு நீந்தி கரை சேர்ந்த இளைஞர்

அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார். தொடர்ந்து இளைஞர் ரியான் மற்றும் அவரது காதலி கலினா ஆகியோர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரைக்கு நீந்தினர் ...

Read More »

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தங்களது நிதி பிரச்சனையை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அரசு , தனியார் துறையின் மீது சைபர் தாக்குதல்!

அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலானது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்  மேலும் அவுஸ்திரேலிய அரசு மற்றும் தனியாரின் இணையத்தள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களைத் திருடி இருக்கலாம் ...

Read More »

அடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு: ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை மந்திரி

அடுத்த ஆண்டு வரைக்கும் ஆஸ்திரேலியாவின் எல்லை மூடப்பட வாய்ப்பு என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளை கண்காணிக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 7,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102 பேர் உயிரிழந்தனர், 6,859 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தினாலும், ...

Read More »

ஈழப் போரின் தாக்கம் சிட்னியில் வாழும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை!

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் கியு மக்டேமைற் இன்று புதன்கிழமை மாநில அவையில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவரது உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு: கடந்த மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய கொடிய இனவழிப்பின் நினைவு நாள் தொடர்பான எனது உரை தொடர்பாக கடுமையான மிகவும் அதிர்ச்சியாக இருக்ககூடிய செய்தி என்னவென்றால், இந்த கொடுமையான அச்சுறுத்தல்கள் அனைத்தும் ...

Read More »

ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் பயணித்த வியாட்நாமியர்கள் !

ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் சென்ற 11 வியாட்நாமியர்கள் மற்றும் அவர்களை அழைத்துச் சென்ற 2 இந்தோனேசியர்கள் கிழக்கு திமோரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்று குறித்த அச்சம் நிலவுவதால், இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு திமோரின் ஜாகோ தீவு அருகே தடுத்து நிறுத்தப்பட்ட 11 வியாட்நாமியர்களில் 8 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீவு அருகே படகு பழுதானதால் உதவியை நாடி அத்தீவில் படகை நிறுத்திய நிலையில், திமோர் நாட்டு அதிகாரிகளால் படகில் இருந்தவர்கள் கைது ...

Read More »