அவுஸ்திரேலியமுரசு

கொரோனா தடுப்பூசி சோதனை: அவுஸ்ரேலியா அதிர்ச்சி!

அவுஸ்ரேலியாவில் கொரோனா தடுப்பூசி சோதனையின்போது, எச்.ஐ.வி.க்கு சாதகம் என போலியான முடிவுகள் காண்பித்ததால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்ரேலிய பயோடெக் நிறுவனமான சிஎஸ்எல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை 216 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட ஆண்டிபாடிஸ், எச்.ஐ.வி. வைரஸ் நோயறிதலில் தோன்றும் விளைவுகளை ஏற்படுத்தியதால் 4இல் ஒருவருக்கு எச்.ஐ.வி. சாதகம் என போலியான முடிவுகளைக் காட்டியது. 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட ...

Read More »

வரிசையாக தற்கொலை செய்துகொள்ளும் அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வெளியான பகீர் அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் சில அவுஸ்திரேலிய துருப்புக்கள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தின. இந்த விவகாரம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்க ஆதரவுடைய விசாரணையை முன்னெடுக்க முடிவாகியுள்ளது. இந்த நிலையிலேயே, மூன்று வார இடைவெளியில் 9 அவுஸ்திரேலிய ராணுவத்தினர் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், அவுஸ்திரேலிய துருப்புகள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொல்லும் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் வெளியாகி ...

Read More »

அகதிகளின் வழக்குளை விசாரிக்க ஆஸ்திரேலிய நீதி மன்றம்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் ஆஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், புலம்பெயர்வு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு மூலம் கீழ் நீதிமன்றங்களின் அதிகாரத்தை பறிக்க இயலாது ...

Read More »

தலிபான் அமைப்பின் உறுப்பினரின் செயற்கை காலை பியர் குடிப்பதற்கு பயன்படுத்திய அவுஸ்திரேலிய படையினர்!

உயிரிழந்த தலிபான் உறுப்பினரின் செயற்கை காலை அவுஸ்திரேலிய படை வீரர்கள் பியர் ஊற்றிகுடிப்பதற்கு பயன்படுத்தியதை காண்பிக்கும் அதிர்ச்சி படமொன்றை கார்டியன் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் பிராந்தியத்தில் அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவி;ற்காக உருவாக்கப்பட்டிருந்த மதுபானசாலையில் உயிரிழந்த தலிபான் வீரரின் செயற்கை காலை பயன்படுத்தி அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் பியர்அருந்தும் படத்தையே கார்டியன் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அவுஸ்திரேலிய வீரர் இன்னமும் சேவையில் உள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. இதேவேளை உயிரிழந்த தலிபான் வீரரின் செயற்கை காலுடன் இரு அவுஸ்திரேலிய வீரர்கள் நடனமாடும் படத்தையும் கார்டியன் வெளியிட்டுள்ளது. தலிபான் ...

Read More »

மைதானத்தில் திரைப்படப் பாணியில் அவுஸ்திரேலிய ரசிகையிடம் காதலைத் தெரிவித்த இந்திய ரசிகர்!

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில், பார்வையாளர் அரங்கில், இந்திய ரசிகர் ஒருவர், அவுஸ்திரேலிய ரசிகையிடம் மோதிரமொன்றை வழங்கி திரைப்பட பாணியில் தனது காதலை தெரிவித்துள்ள சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி  அவுஸ்திரேலியாவுக்குச்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்றைய தினம்  நடைபெற்றது. இந் நிலையில் குறித்த போட்டியினைப் பார்வையிட வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், தனது தோழியான அவுஸ்திரேலிய ...

Read More »

சிறைவைக்கப்பட்டுள்ள அகதிக்கு தற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்பு கலையின் மூலமாக ஆஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான நட்பைக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் Taekwondo உடையுடன் காணொலி அழைப்பின் மூலம் அகதியான மோஸ்க்கு வகுப்பெடுக்கிறார் சிறுவனான கேலம். ஆஸ்திரேலிய அரசால் முதலில் மனுஸ் தீவிலும் பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடத்திலும் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருப்பவர் மோஸ். கேலமின் அம்மாவான ஜேனின் தொடர்பை 2014ல் கடிதம் எழுதும் ஒரு பிரச்சாரத்தின் மூலம் அகதியான மோஸ் பெற்றிருக்கிறார். “எப்போதும் எனக்கு ...

Read More »

ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் உள்ள ஈழ தமிழ் அகதி குடும்பம்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் தடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட ஈழ தமிழ் அகதி குடும்பம் ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் கடந்திருக்கிறது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் ...

Read More »

பாலியல் வன்புணர்வு: தென் ஆப்பிரிக்கரின் ஆஸ்திரேலிய குடியுரிமை பறிப்பு

ஆஸ்திரேலியாவில் இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய விவகாரத்தில் 9 ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கர் ஒருவரின் ஆஸ்தரேலியாவின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. Robin Gerald Dyers எனும் அறியப்படும் அந்நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் 9 ஆண்டுகள் சிறைக்கு பிறகு அண்மையில் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்ட இந்நபர், விரைவில் தென் ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்று, ஆஸ்திரேலியாவில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் வெளிநாட்டவர்கள், குடியுரிமைப் பெற்ற போதிலும் அவர்களின் குடியுரிமை பறிக்கும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற ...

Read More »

ஆஸ்திரேலியா: நோய்வாய்பட்ட மனைவியை சந்திக்க அகதிக்கு அனுமதி மறுப்பு

மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை சந்திப்பதற்கான அனுமதியை ஆஸ்திரேலிய எல்லைப்படை மறுத்து வருவதாக ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள சோமாலிய அகதி சயப் அலி சயப் குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த ஓராண்டில் மூன்று அறுவை சிகிச்சை செய்துள்ள அவரது மனைவியை காண ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என எழுத்துப்பூர்வமாக எவ்வித மறுப்பும் வழங்கப்படவில்லை என சயப் கூறுகிறார். ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையைச் சேர்ந்த ஒரு ஊழியர் தன்னை பார்வையிட்டு, “கொரோனா சூழல் காரணமாக உங்களது மனைவியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை,” எனக் கூறியதாக சயப் குறிப்பிட்டுள்ளார்.

Read More »