அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 33 புகலிடக் கோரிக்கையாளரின் படகுகள்!

கடந்த 5 ஆண்டுகளில் 33 படகுகள் கடலில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது அல்லது திருப்பியனுப்பப்பட்டதாக தி அவுஸ்திரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் குறித்த படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் 800 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நேசநாடுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் 78 ஆட்கடத்தல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2525 பேர் அவுஸ்திரேலியாவுக்கு படகுப்பயணம் ...

Read More »

தசாப்த கால பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலிய பிரதமர்!

பல தசாப்தங்களாக இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோகங்களிற்காக பாதிக்கப்பட்டசிறுவர்களிடம் அவுஸ்திரேலியாவின் சார்பில் பிரதமர் ஸ்கொட் மொறிசன் மன்னிப்பு கோரியுள்ளார். .பல தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளமை ஐந்து வருடங்களாக இடம்பெற்ற விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்தே பிரதமர் தேசத்தின் சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார். இன்று இறுதியாக நாங்கள் சிறுவர்களின் கதறல்களை ஏற்றுக்கொள்கின்றோம் எதிர்கொள்கின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டு மன உளைச்சலிற்குள்ளனவர்கள் முன்னாள் மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் பணிவுடையவர்களாகயிருக்கவேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தழுதழுத்த குரலில் உரையாற்றிய பிரதமர் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை ஏற்றுக்ககொண்டதுடன் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அகதி மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவிலுள்ள அகதி ஒருவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் காதல் விவகாரத்தினால் இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளனர். ஈரான் நாட்டைச்சேர்ந்த 42 வயதுடைய நபர் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மனுஸ் தீவைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் மனுஸ்தீவை சேர்ந்தவர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியவரின் அங்க அடையாளங்களை தெரியவில்லை என காவல் துறையினர் ...

Read More »

சிறிலங்கா இளைஞனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்தது அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்!

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டசிறிலங்கா இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத் திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிஸாம்தீன் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டில் மொஹமட் நிஸாம்தீனை சிக்க வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ...

Read More »

நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்ளும் ஆஸ்திரேலியா!

நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் வர வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், நியூசிலாந்தின் மீள்குடியேற்ற சலுகையை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். நவுரு மற்றும் மனுஸ்தீவுகளில் உள்ள பல்வேறு நாட்டு அகதிகளில் ஆண்டுதோறும் 150 அகதிகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நியூசிலாந்து அரசு ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட காலமாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றது. அதனை பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசு நிலுவையில் வைத்திருந்த நிலையில், மீண்டும் அது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், ஆலயத்தில் உள்ளேயிருந்த சுமார் முப்பது கடவுள் சிலைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் ஆலய சுவரில் JESUS என்று எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த18 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிட்னி Regent Park பகுதியில் அமைந்துள்ள பாரதிய மந்திர் ஆலயமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. முன்பு கிறிஸ்தவ தேவாலயமாக பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மண்டபம் ...

Read More »

சிறிலங்கா மாணவருக்கு எதிரான குற்றச்சாட்டை ஆஸி. காவல் துறை மீளப் பெற்றது!

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா மாணவர் நிஸாம்தீனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆஸ்திரேலிய காவல் துறை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது ஆஸ்திரேலியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டார் என்றும் முன்னாள் பிரதமர் Malcolm Turnbull உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதற்கும் திட்டமிட்டிருந்தார் என்றும் குற்றச்சாட்டப்பட்டு கடந்த ஓக்ஸ்ட் மாதம் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட சிறிலங்கா மாணவர் நிஸாம்தீன் உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் பல்வேறு பாதுகாப்பு ஏஜென்ஸிகளினாலும் விசாரணைக்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்ட அகதிகள்!

நவுறு தடுப்பு முகாமிலுள்ள பல அகதிகளை இரகசியமாக அரசு, அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. குறித்த அகதிகள் தொடர்பில் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவரும் ஆளும் Morrison அரசு இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த இரகசிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளாக கூறப்படுகிறது. நவுறு தீவில் உள்ள அகதிகளை நியூஸிலாந்து அரசு ஏற்றுக்கொள்வதாக தொடர்ந்து சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அதனை அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே முக்கியமாக சிறுவர்கள் குழந்தைகளுடன் உள்ள குடும்பங்களை முதற்கட்டமாக ரகசியமாக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read More »

தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளது!

பிரித்தானியாவில்  உள்ள ஈழத் தமிழ் குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள ஈழத் தமிழர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். எனினும் அவருக்கு விமானத்தில் ஆபத்து உள்ளதாக கூறி குடும்பத்தினர் 4 வைத்தியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சங்கரப்பிள்ளை பாலசந்திரன் கடந்த 6 வருடங்களில் பக்க வாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான குறித்த நபர் கடந்த 2007ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சென்ற நிலையில் அவரது ...

Read More »

ஒருநாள் போட்டியில் 571 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளூர் ஆஸ்திரேலியா அணி சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியும், போர்ட் அடிலெய்ட் அணியும் மோதின. டாஸ் வென்ற நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்தது. மெக் பர்லின் 80 பந்துகளில் 136 ரன்களும், சாவில் 56 பந்துகளில் 120 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து ...

Read More »