அவுஸ்திரேலியமுரசு

மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் துன்புறுத்தல்!

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பப்புவா நியுகினி நாட்டின் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், இந்த மாதம் 31ம் திகதியுடன் குறித்த முகாம் மூடப்படவுள்ளது. இந்த நிலையில் முகாமை மூடுவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அங்குள்ள அகதிகள் துன்புறுத்தல்களுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இது தொடர்பில் ...

Read More »

பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!

NSW பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படுவதாக NSW மாநில முதல்வர் Gladys Berejiklian நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். அத்துடன் NSW அரசாங்கப் பள்ளிகளுக்கான தேவைகள் அடிப்படையிலான கல்வி நிதி 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக 8 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார். மாணவர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு $ 1.09 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் கணித கல்வியறிவுத் திட்டங்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சி ஆகியவற்றுக்கு அளிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள்!

விக்டோரியா மாநிலத்தின் பொது சுகாதார துறையில் கடுமையான அபாயங்களை விக்டோரியாவின் ஊழல் கண்காணிப்பு அமைப்பு இனங்கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான கொடுமைப்படுத்துதல் மற்றும் தொல்லை (bullying and harassment) ஆகியனவும் சுகாதார துறையில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள், மருந்து திருட்டு, மோசடி மறைப்புக்கள் மற்றும் மோசடியான பண வசூல், அதாவது fraudulent billing ஆகியவை நிலவுவதாக மாநிலத்தின் ஊழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. உடல்நல சேவைகளில் இருந்து கட்டுப்பாட்டு மருந்துகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ...

Read More »

முதலை பொறிக்குள் சென்று நீந்தி விளையாடிய விசித்திர மனிதர்கள்

அவுஸ்ரேலியாவில் முதலைக்கு வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் சென்று தைரியமாக 4 பேர் புகைப்படம் எடுத்த நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. அவை அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் ஆற்றில் உள்ள முதலைக்கு இரையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த ஏரியில் முதலைக்காக பொறி வைக்கப்பட்டிருந்தது. அந்த பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். பொறிக்குள் சென்றும் அதனை சுற்றியும் ...

Read More »

மூடப்படும் தொழிற்சாலையால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை!

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரிலுள்ள ஹோல்டன் மோட்டார் வாகன உற்பத்தி நிலையம் மூடப்படுகிறது. இதனால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த வாகன உற்பத்தி ஆலைக்கு வாகன உபகரணங்களை வழங்கும் தொழிற்சாலைகளையும் சேர்த்தால், சுமார் 2,500 பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது என கூறப்படுகிறது. வேலை இழந்தவர்கள் புதிய வேலை தேடவும், இயல்பு வாழ்க்கை நடத்தவும் தெற்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கும் ஆதரவு தொடரும் என்று அந்த மாநில Premier Jay Weatherill தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கென, முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்றில் அரசு முன்வைத்த சட்டமுன்வடிவு, எதிர்கட்சிகளின் தந்திரோபாயமான நகர்வு மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒக்டோபர் 18 புதன்கிழமைக்கு முன்னர், தேவைப்படும் மாற்றங்களுடனான சட்டமுன்வடிவை தம்முன் சமர்ப்பிக்க வேண்டுமென, எதிர்கட்சிகளின் செனட்டர்களால் அரசுக்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அரச தரப்பினரால் இதனை நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்றிரவு குறித்த சட்டமுன்வடிவு Senate Notice Board-இலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சட்டமுன்வடிவு மீண்டும் செனட் அவையில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்படுவதும் அதற்கான ஒப்புதலைப் பெறுவதும் மிகக்கடினம் என ...

Read More »

கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கான வாக்கெடுப்பு!

விக்டோரிய மாநிலத்தில் Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய கருணைக் கொலையை ஆதரிக்கும் சட்டம், 24 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பின்னர் விக்டோரிய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 47 பேர் ஆதரவு தெரிவித்தும் 37 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளதாக தெரியவருகிறது. பெரும்பான்மையான Labor கட்சி உறுப்பினர்கள், இரு Greens கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் மற்றும் சில Coalition நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சட்டமூலம் தற்போது 40 ...

Read More »

UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதல் பசுபிக் நாடு அவுஸ்ரேலியா!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அவுஸ்திரேலியாவுக்கு அங்கத்துவம் கிடைத்துள்ளது. ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபைக்கு அவுஸ்ரேலியா, காங்கோ ஜனநாயக குடியரசு உட்பட 15 நாடுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதலாவது பசுபிக் நாடு அவுஸ்திரேலியா என்றும் அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் மின்சக்தி மற்றும் எரிசக்தியில் பாரிய மாற்றம்!

‘National Energy Guarantee’ எனப்படும் மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் மின்சக்திப் பயன்பாடு தொடர்பில் பாரியளவிலான மாற்றத்தை இது கொண்டுவருமென பிரதமர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த திட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் அடுத்துவரும் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு குடும்பமும் வருடத்துக்கு 115 டொலர்கள் வரை தமது மின் கட்டணத்தில் சேமிக்கமுடியமென அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் நுகர்வோருக்கு ஒரு சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது. அதேவேளை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் ...

Read More »

வேலையைத் தூக்கியெறிந்த தொகுப்பாளினி!

அவுஸ்திரேலியாவில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் சக ஆண் ஊழியருக்கு நிகரான ஊதியம் தனக்கு வழங்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி பிரபல பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் Lisa Wilkinson தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். குறித்த தொகுப்பாளினி Channel 9 தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியை (Today Show) Karl Stefanovic உடன் இணைந்து Lisa Wilkinson தொகுத்து வழங்கி வந்தார். ஆண் தொகுப்பாளர் Karl ற்கு $2 மில்லியன் ஊதியமும் Lisa இற்கு $1.1 மில்லியன் ஊதியமும் வழங்கப்பட்டு ...

Read More »