அவுஸ்திரேலியமுரசு

கோடீஸ்வரராக இருந்தவர் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்!

அவுஸ்திரேலியாவில் £17 மில்லியன் லொட்டரியில் வென்ற நபர் மொத்த பணத்தையும் தவறான முதலீட்டால் இழந்துள்ளார். ஷெரீப் கிர்கிஸ் என்பவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவருக்கு கடந்த 2007-ல் 23 வயதிருக்கும் போது லொட்டரியில் £17 மில்லியன் பரிசு விழுந்தது. ஆனா இவ்வளவு பெரிய பரிசு பணம் அவர் வாழ்க்கையை வசந்தமாக மாற்றிவிடவில்லை என்றால் நம்பமுடிகிறதா? ஆம், ருசல் போலிவிகா என்ற நபரின் வழிகாட்டுதலோடு பரிசு பணத்தில் மதுபான விடுதியை விலை கொடுத்து வாங்கியது, சொகுசு படகை வாங்கியது போன்ற விடயங்களில் ஷெரீப் முதலீடு செய்தார். ...

Read More »

இறந்த குழந்தையின் புகைப்படத்தை வைத்து பெற்றோரை மிரட்டிய இளம்பெண்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜே மற்றும் டீ விண்ட்ரோஸ் என்கிற தம்பதியினரின் மகள் அமியா ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்த தம்பதியினர் ஒரு வணிகவளாகத்திற்கு சென்ற போது தங்களுடைய செல்போனை தவற விட்டுள்ளனர். அதில் இறந்த தங்களுடைய குழந்தையின் புகைப்படங்கள் இருப்பதால், யாரேனும் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனை பார்த்த சிட்டி நூர்ஹிதாயா கமல் (24) என்கிற மலேசிய இளம்பெண், நீங்கள் தவறவிட்ட செல்போன் என்னிடம் தான் இருக்கிறது. அவற்றை நான் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ...

Read More »

ஆஸ்திரேலிய அணியில் இருந்து கவாஜா விலகல்!

உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கவாஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேத்யூ வடே சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தது. அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு ஹாம்ஸ்டிரிங் (தொடைப்பகுதியில்) இன்ஜூரி ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வடேவை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது ...

Read More »

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன்!

பிடிபட்டால் அவ்வளவுதான், நாடு கடத்தி விடுவார்கள் என்று கூறும் இந்திய இளைஞர் ஒருவர், நான் எந்த தவறும் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார். மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர் குமார். பத்து ஆண்டுகளாகிவிட்டது அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து. மாணவர் விசா காலாவதியானதும், spousal விசாவுக்கு முயற்சி செய்யும் நேரத்தில் காதலியைப் பிரிய வேண்டியதாயிற்று. புதிய விசா பரிசீலனையிலிருக்கும்போது குமார் நாட்டை விட்டு வெளியேற மறுத்ததால், விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடிவு செய்தார் ...

Read More »

வடகொரியாவால் விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர்!

வடகொரியாவால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவர் அலெக், தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலெக் சிங்லே(29) என்ற மாணவர், முதுகலைப் பட்டம் பயில வடகொரியா சென்றுள்ளார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் காணாமல் போனதாக மாணவரின் பெற்றோர் தெரிவித்தனர். மேலும், அவர் குறித்த எந்த தகவலும் இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவர் அலெக் சிங்லே கடந்த வியாழக்கிழமை வடகொரிய அரசால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பாக தெளிவான ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 17 பேர் பலி!

அவுஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பதால் உண்டாகும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய நாளொன்றுக்கு 17 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. Australian National University மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் 19 ஆயிரம் பேர் மத்தியில் மேற்கொண்ட நுணுக்கமான ஆய்வின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 27 லட்சம் என்றும் இவர்களில் 11 ஆயிரத்து 400 பேர் வருடமொன்றுக்கு பல்வேறு நோய்களினால் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். இவர்களில் 17 பேர் சராசரியாக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஈழ தமிழ்ப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவர்?

வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஈழ பின்னணி கொண்ட தமிழ்ப்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததாக நம்பப்படுகிறது. கடந்த திங்களன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் என்று கூறப்படும் குறிப்பிட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற பின்னர் கணவரே பொலிஸாரை அழைத்தார் என்று குயின்ஸ்லாந்து காவல் துறையினர் கூறியுள்ளார்கள். தேவகி என்ற 52 ...

Read More »

பலமான கடவுச்சீட்டு பட்டியல்! முன்னேறியது அவுஸ்திரேலியா!

உலக அளவில் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்படுத்தல் வெளியாகியுள்ளது. இந்த தரப்படுத்தலில் அவுஸ்திரேலியா முன்னேரியுள்ளது. Henley எனும் கடவுச்சீட்டு தரப்படுத்தல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கை மூலம் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஆய்வுக்கு அமைய ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. குறித்த நாடுகள் இரண்டின் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பிரஜை ஒருவர் விசா இன்றி 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்த பட்டியலுக்கமைய தென் கொரியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கடவுச்சீட்டை வைத்திருப்போர் 187 நாடுகளுக்கு விசா ...

Read More »

சிட்னி நகரின் முக்கிய இடங்களை தகர்க்க திட்டமிட்ட ஐஎஸ்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் மேற்குபகுதியில் இன்று பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் ...

Read More »

கடமைகளை பொறுப்பேற்ற ஆஸ்திரியாவுக்கான சிறிலங்கா தூதுவர்!

ஆஸ்திரியாவுக்கான  சிறிலங்கா  தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆஸ்திரியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக ஆஸ்திரிய – சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு ஆஸ்திரியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மீண்டும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் ...

Read More »