கடமைகளை பொறுப்பேற்ற ஆஸ்திரியாவுக்கான சிறிலங்கா தூதுவர்!

ஆஸ்திரியாவுக்கான  சிறிலங்கா  தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆஸ்திரியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக ஆஸ்திரிய – சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு ஆஸ்திரியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மீண்டும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார். ஆரம்பத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும், வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளராகவும் பதவி வகித்ததுடன், மேலும் பல இராஜதந்திர பதவிகளை அவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.