குமரன்

ஊடகவியலாளர் அஸ்வினின் இறுதி அஞ்சலி

கடந்த மாதம் 22ம் திகதி உக்கிரன்  நாட்டில் அஸ்வின் உயிரிழந்து இருந்தார். அவரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. ஈழத்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சன் மேற்கு நாடு ஒன்றில் புகலிடம் அடையச் சென்ற வேளையிலேயே ஒவ்வாமை காரணமாக  திடீர் மரணத்திற்கு உள்ளாகினார். யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாக் கொண்ட அஸ்வின் சுதர்சனம், சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தினக்குரல் பத்திரிகையில் காட்டூனிஸ்டாக பணிபுரிந்து தன்னுடைய கேலிச்சித்திரங்கள் மூலம் பலரது ...

Read More »

தேவி- ஒரு முறை பார்க்கலாம்.!!!.

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு, தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தயாரிக்கவும் செய்துள்ளார், இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதுடன், ஏ.எல்.விஜய் இயக்கத்தில், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என “ட்ரைலர்” பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம். தமன்னாவை வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்யும் பிரபு தேவா, மும்பையில் ஒரு அபார்ட்மெண்டுக்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவின் நெருக்கடியான அட்டவணை

அவுஸ்ரேலியா அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிராக பிப்ரவரி 22-ந்தேதி டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதற்கு அடுத்த நாள் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் முக்கியமான அணி. அந்த அணி சில நேரங்களில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணையைத் தயாரிக்கும். பொதுவாக இரண்டு தொடருக்கிடையில் சில நாட்களாவது இடைவெளி இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் நடைபெற இருக்கும் தொடருக்கிடையில் ஒருநாள் மட்டுமே இடைவெளி உள்ளதுபோல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை-அவுஸ்ரேலியா அணிகளுக்கு ...

Read More »

பி.எம்.டபிள்யூ மின்சார பைக்

மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் உலகின் மிகப்பிரலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘பி.எம்.டபிள்யூ’ புதிய ரக எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் உலகின் மிகப்பிரலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘பி.எம்.டபிள்யூ’ புதிய ரக எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒற்றை பிரேமில் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளுக்கு ‘பி.எம்.டபிள்யூ மோட்டாராட் விஷன் நெக்ஸ்ட் 100’ ( BMW Motorrad VISION NEXT 100 bike) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள ...

Read More »

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான புதிய தடுப்பு நிலையம்

பப்புவா நியூகினியில் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தங்க வைப்பதற்கான புதிய தடுப்பு நிலையத்தின் கட்டுமானப்பணிகள் விரைவில் ஆரம்பமாகுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களைத் தங்க வைப்பதற்கே இந்த நிலையம் கட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. பப்புவா நியூகினியின் ஒரேயொரு விமானநிலையத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைக்கப்படுகின்றது. இப்படியான தடுப்பு நிலையம் ஒன்று கட்டப்படுவதற்கான அறிவிப்பு கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இதற்கென 20மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி நீதிமன்றம் மனுஸ் ...

Read More »

விக்டோரியா மாநில புலமைப் பரிசில்

விக்டோரியா மாநில அரசு RMIT பல்கலைக்கழகத்தினூடாக வழங்கவுள்ள புலமைப் பரிசில் குறித்த தகவல் இது. நீங்கள் தமிழ் மொழிபெயர்த்துரைப்பாளராக(Interpreter) பணிபுரிகிறீர்களா? அல்லது அதற்கான டிப்ளோமா பயிற்சி நெறியை மேற்கொள்கிறீர்களா? விக்டோரியா மாநில அரசு மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான புலமைப்பரிசிலை வழங்குகிறது. இப்புலமைப் பரிசில் குறித்த மேலதிக விபரங்களை http://multicultural.vic.gov.au/projects-and-initiatives/improving-language-services/interpreter-scholarships என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

Read More »

இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்கள்-29ம் ஆண்டு நினைவு நாள்

அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள். 1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் நடாத்தப்பட்ட அந்தக் கோரப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ...

Read More »

“வீர சாகசமாக சண்டை போடும் படங்களில் நடிக்க ஆசை”- காஜல் அகர்வால்

“வீர சாகசமாக சண்டை போடும் அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை” என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “கதாநாயகிகள் மென்மையானவர்கள். அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளாலும் முரடுத்தனமாக சண்டை போட்டு நடிக்க முடியும். கடந்த காலங்களில் பல நடிகைகளால் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில், கிடைத்த கதைகளில் நடித்தேன். காட்சிகள் ...

Read More »

புதிய செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையம்- ஸ்டீபன் ஹாக்கிங்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இயற்பியல், விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங், புதிய செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். எதிர்கால செயற்கை அறிவாற்றல் நிலையம் எனப்படும் அந்த நிலையம், செயற்கை அறிவாற்றலின் பல்வேறு வகையான பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தும். கூடுதல் திறன் கொண்ட அறிவார்ந்த கைபேசிகள் முதல், இயந்திர மனித அறுவை சிகிச்சையாளர்கள், டெர்மினேட்டர் பாணியிலான ராணுவ மனித இயந்திரங்கள் வரை பல வகையான ஆய்வுகள் நடத்தப்படும். லிவர்கோல்ம் அறக்கட்டளையின் 12 புள்ளி 3 மில்லியன் டாலர் மானியத்துடன் தொடங்கப்பட்டுள்ள அந்த ...

Read More »

நீங்கள் தான் இவனுக்கு எல்லாம்- கண்ணீரில் கலங்கிய தாய்

அவுஸ்திரேலியாவில் தன் மகனின் நிலைமையை சக மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தாய் ஒருவர் கண்ணீருடன் பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம் கண்கலங்க வைத்ததுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகணத்தைச் சேர்ந்தவர் Sonia Buckley. இவருக்கு புல்லி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். இவர் கற்றல் குறைபாடு மற்றும் நடத்தை கோளாறு(ADHD, ODD) போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எளிதில் அனைவரிடமும் கோபப்படக்கூடிய தன்மை கொண்டவர். இதனால் சக பள்ளி மாணவர்களும் இவருடன் வந்து பழகுவதற்கு சற்று அஞ்சுவர். இது போன்ற சூழ்நிலையில் ...

Read More »