குமரன்

புளூட்டோவில் இருந்து பூமிக்கு 15 மாதம் கழித்து வந்த தகவல்

புளூட்டோவில் இருந்து நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் அனுப்பிய தகவல் மிகவும் காலதாமதமாக 15 மாதம் கழித்து பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள நவகிரகங்களில் மிக சிறியது புளூட்டோ. இந்த கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் நியூ ஹாரிசன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு ஆய்வு நடத்திவரும் நியூ ஹாரிசன்ஸ் விண்கலம் தகவல்கள் மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளது. அத் தகவலை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 14-ந் திகதி அனுப்பி வைத்தது. இத்தகவல் 15 மாதங்களுக்கு பிறகு தான் ...

Read More »

திரைக்கு வராத கதை – விமர்சனம்

நடிகர் பிரணவ் மோகன்லால் நடிகை இனியா இயக்குனர் துளசி தாஸ் இசை ஸ்ரீகுமார் எம் ஜி ஓளிப்பதிவு சஞ்சீவ் ஷங்கர் விமர்சிக்க விருப்பமா? கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார். இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. ...

Read More »

அவுஸ்ரேலியாவில் தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள்

அவுஸ்ரேலியா நாட்டில் தீபாவளி திருநாளை அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆடல் பாடலுடன் வெகுவிமர்சையாக கொண்டாடினர். அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி தீபாவளி திருநாளை கொண்டாடினார்கள். செயின்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர். முன்னதாக மேளதாளம் முழங்க பெண்கள் தீபங்கள் ஏந்தியபடியே விருந்தினர்களை அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலையான சிலம்பம், ...

Read More »

மட்டக்களப்பை சேர்ந்தவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா – வசந்தகுமார் (வயது48) என்பவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி பொன்னுச்சாமி ரஞ்சிதமலர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், ...

Read More »

அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கு தடை

அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2007 முதல் 2013-ம் ஆண்டு வரை தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர். அங்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் 2014-ம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைந்தது. அதை தொடர்ந்து அங்கு அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி எந்த நாட்டில் இருந்து வந்தாலும் அகதிகள் அவுஸ்ரேலியாவுக்குள்ளும், அவர்களது படகுகள் கடல் ...

Read More »

அவுஸ்ரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் நேற்று(30) தொலைபேசியில் பேசினார். அவுஸ்ரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் இந்தியர், மன்மீத் அலிசீர் (வயது 29). இவர் அங்கு கடந்த 28–ந் தேதி ஓடும் பஸ்சில் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். நல்ல பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்த மன்மீத் அலிசீரின் படுகொலை, அந்த இன மக்களிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி, அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் இன்று தொலைபேசியில் பேசினார். அவருக்கு தீபாவளி வாழ்த்துகள் ...

Read More »

அவுஸ்திரேலியாவிற்கான புதிய இந்திய தூதர் நியமனம்

அவுஸ்திரேலியாவிற்கான புதிய இந்திய தூதராக டாக்டர் அஜய் எம். கொண்டனே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐ.எப்.எஸ், 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். கொண்டனே மிக விரைவில் தனது பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வடக்கில் அவதூறு பரப்பும் இணையத்தளம் ஒன்றுக்கு தடை

வடக்கில் நீதித்துறை தொடர்பாக பொய்யானதும், அவதூறு பரப்புவதுமான செய்தியை வெளியிட்டுவந்த தமிழ் இணையத்தளமொன்று நேற்றையதினம் சிறீலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சின் முறைப்பாட்டிற்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிலால் தெரிவித்துள்ளார். ‘குறித்த இணையத்தளமானது, வடக்கில் நீதித்துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் தொடர்பாக அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், வடக்கில் பொதுமக்களைத் தூண்டி விடும் வகையில் செயற்படுவதாகவும், இந்த இணையத்தளம் மீது ...

Read More »

புதிதாக உருவாகும் கோள்!

ஒரு புதிய இளம் கோள் உருவாகிக் கொண்டிருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். இதன் கண்டுபிடிப்பில், பல நாடுகளைச் சேர்ந்த சாதாரண குடிமக்களும் உதவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கோள் உருவாகும்போது விண் பொருட்கள், துகள்கள் மற்றும் வாயுக்கள் மிதமிஞ்சிய வெப்பத்துடன் ஒரு மையப் பகுதியில் குவிய ஆரம்பிக்கும். பார்ப்பதற்கு நடுவே துளை உள்ள ஒரு வட்டு போல இந்தக் காட்சி இருக்கும். இத்தகைய ஒரு காட்சியைத்தான் சர்வதேச முயற்சியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘அஸ்ட்ரோ பிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்’ என்ற ஆய்விதழில், இந்த இளம் ...

Read More »

அவுஸ்ரேலியா-பொழுதுபோக்கு பூங்காக்களில் அதிரடி பாதுகாப்பு சோதனை

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில், நீர் சவாரி செய்யும் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்குவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இம் மாத துவக்கத்தில் குயின்ஸ்லாந்தில் ஒரு கட்டட மனையில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் இருவர் பலியானார்கள். பொழுது போக்கு ...

Read More »