மட்டக்களப்பை சேர்ந்தவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா – வசந்தகுமார் (வயது48) என்பவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் NO;152 Rock State, bathurst, new South wel 2795 என்ற முகவரியில் வசித்து வந்த தனது கணவர் இறந்து விட்டதாக ஒக்டோபர் 28 அதிகாலை அவுஸ்திரேலியாவில் உள்ள உறவினர் ஒருவரின் தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாக வாழைச்சேனை கிண்ணையடியை சேர்ந்த உயிரிழந்தவரின் மனைவி பொன்னுச்சாமி ரஞ்சிதமலர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் தனது ஒரு மகளும் கணவரும் வசித்து வந்ததாகவும், நான்கு மகள்களுடன் தான் வாழைச்சேனை கிண்ணையடியில் வசித்து வரும் நிலையில் தனது கணவர் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை தருவதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.

அத்துடன் அவரின் உயிரிழப்புக்கு காரணம் பிரேத பரிசோதனை செய்து முடிந்த பின்னர் வைத்திய அறிக்கையின் மூலம் தான் கூறமுடியும் என்றும் தற்போது எதுவும் கூறமுடியாது என அந்நாட்டு சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தனது உறவினர் தொலைபேசியில் கூறியதாகவும்இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கஷ்டப்பட்டு வாழ்ந்து வரும் நிலையில் தனது கணவரின் உயிரிழப்பு தாங்க முடியாத வேதனையை தருவதாகவும் கண்ணீர் மல்க இறந்தவரின் மனைவி பொன்னுச்சாமி – ரஞ்சிதமலர் தெரிவித்தார்.

 

625-0-560-320-160-600-053-800-668-160-90-20-6