குமரன்

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எஸ்.ஜி.சாந்தனின் வணக்கநிகழ்வு

கடந்த 26 02 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community House மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா சீவராசா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார். அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் ...

Read More »

27 வருட துன்பங்களிற்கு முடிவு கட்டுங்கள் – வலி வடக்கு பொது அமைப்புக்கள்

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கின்ற மக்களுடைய காணிகளை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி, ஊறணி, தையிட்டி ஆகிய கிராமங்களின் ஒன்றிணைந்த அமைப்பு, 27 வருட துன்பங்களை இந்த அரசாங்கமாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்த சந்திப்பினை மேற்படி குழுவின் தலைவர் விஜயரட்ணம் ரட்னராஜா, செயலாளர் கந்தையா பாலசுப்ரமணியம் ஆகியோர் உட்பட குழுவின் அங்கத்தவர்கள் இணைந்து நடாத்தியிருந்தனர். ...

Read More »

சந்திரயான்-1 விண்கலத்தை நாசா கண்டுபிடித்தது

தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு செயற்கைக் கோளான சந்திரயான்-1 விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திரயான்-1. நிலவை ஆராய்வதற்கு சந்திரயான்-1 விண்கலம், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள், அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இழந்து விட்டது. இந்த நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, ...

Read More »

ஐ.நா. சபையில் ஐஸ்வர்யா தனுஷ்

ஐ.நா.சபையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் இந்தியாவின் பங்களிப்பாக நடந்த நடன நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் கவிதையும் இடம்பெற்றது. அந்த கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நடனம் ஆடினார். பரத நாட்டிய குழுவோடு ‘நடராஜர் ஆராதனை’ என்ற நடனாஞ்சலியில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘அவசர தாலாட்டு’ என்ற கவிதைக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனம் ஆடினார். ‘இரத்ததானம்’ என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்ற அந்த கவிதை வேலைக்கு செல்லும் பெண்களின் துயரம் பற்றியது ஆகும். இல்லத்தரசிகளாக இருந்த பெண்கள் அலுவலக ...

Read More »

மிகச்சிறந்த பெண்ணிய தலைவர் பிரபாகரன் மட்டுமே! கஸ்தூரி

பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி என்ற அமைப்பை மகளிர் தினமான நேற்று (8) துவக்கியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமார் மகள், வரலெட்சுமி. போடா போடி, தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் பாவனா பாலியல் விவகாரம் நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன், தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநர் என்னை தவறான கண்ணோட்டத்துடன் என்னை அணுகினார் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரத்குமார் மகள் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இசை நிகழ்ச்சி!

லண்டனைச் சேர்ந்த முன்னணி இசைக்கலைஞர்களான MC.சாய், மற்றும் ரீஜே ஆகியோர் மெல்பேர்ன் வாழ் இசைக்கலைஞர் டியோவுடன் இணைந்து முதல்தடவையாக  அவுஸ்ரேலியாவில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துகின்றனர். நாளை (10) வெள்ளிக்கிழமை மெல்பேர்னில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பில் அவர்களோடு ஒரு சந்திப்பு. Date: Friday 10th March, 2017 at 8pmVenue: Room 680, 680 Glenferrie Rd, Hawthorn.For more details contact Pak:0410 881 805/ Rath 0450 969 652  

Read More »

கைகளால் வரையப்பட்ட புதிய மெல்பேர்ன் வரைபடம்

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கையால் வரையப்பட்ட மெல்பேர்ன் வரைபடத்தை வெளியிட்ட பெண் தற்போது மெல்பேர்னின் புதிய வரைபடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். Melinda Clarke என்ற பெண் உலக சுற்றுப்பயணம் சென்று பல இடங்களின் வரைபடங்களைப் பார்த்தபோது மெல்பேர்னுக்கு இப்படியான வரைபடம் இல்லையே என யோசித்ததன் விளைவாக 1980களில் மெல்பேர்னின் கையால் கீறப்பட்ட வரைபடம் உருவாகியிருந்தது. Deborah Young  என்ற ஓவியரின் துணையுடன் Hot air பலூனில் மெல்பேர்ன் முழுவதும் பறந்து 7,500 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து மெல்பேர்ன் வரைபடத்தை அவர் ...

Read More »

இந்த ஆண்டின் ஃபிளாக்‌ஷிப் ஆப்பிள் போன்: ஐபோன் எடிஷன்

2017 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் புதிய ஃபிளாக்‌ஷிப் போன், ஐபோன் எடிஷன் என அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 ஐபோனில் ஏகப்பட்ட அம்சங்களில் புதுமையை புகுத்த இருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்“ என அழைக்கப்படலாம் என ...

Read More »

கேரள அரசின் சினிமா விருதுகள்: சிறந்த பாடகியாக சித்ரா தேர்வு

கேரளா அரசு வழங்கும் சினிமா விருதுகள் பட்டியலில் பின்னணி பாடகி சித்ரா சிறந்த பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தற்போது கேரள அரசின் 47-வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சிறந்த நடிகராக விநாயகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘கம்மட்டிப்பாடம்’ என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ‘அனுராக கரிக்கின்வெள்ளம்’ என்ற படத்தில் நடித்த ரெஜீசா விஜயன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த படமாக ‘மேன்ஹோல்’ ...

Read More »

வாடிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் ‘ரோபோ’க்கள் தயாரிப்பு

வாடிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் ‘ரோபோ’ க்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். தற்போது அனைத்து துறைகளிலும் ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் சேவை பயன்படுத்தப்படுகிறது. எனவே தொழில்நுட்பங்கள் ‘ரோபோ’வில் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஸ்மார்ட் ரோபோ’க்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மனிதர்களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ரோபோ’வை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலிதனமான கேள்விகளாக கேட்கும் வகையில் அது ...

Read More »